Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
உலக மக்களுக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?

உலகியல் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள், வள்ளலார் அளித்த சன்மார்க்க நெறியை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு விருப்பம் இருப்பின் அதைப் பின்பற்றி நலமடையுங்கள். ஏனெனில் நாங்களும் உங்களைப் போல் இறைவனைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் தெரிந்து கொள்ளாமல், பல உயிர்களை வதைத்து கொலை செய்து கிடைக்கும் அசைவ உணவை உண்ட காலம் உண்டு. ஆனால் அது தவறென உணர்ந்து இன்று அந்த அருவெறுப்பான ஆன்ம நேயமற்ற உணவை விலக்கி சுத்த காய்கறி உணவை உண்பதால் உடல் நோய்களிலிருந்து மட்டும் விடுதலை பெற்றோம் என்று கூறுவதை விட நல்ல மன நலமும் பெற்றோம் என்பதே உண்மையிலும் உண்மை. எனவே சன்மார்க்க நெறி சார்ந்து நலம் பெறுவீர் அன்பர்களே.


#3630. பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே


தான் பெற்ற அருள் அனுபவத்தை இந்த உலக மக்கள் அனைவரும் பெற வேண்டியே வள்ளலார் இந்த உலகப் பொது நெறியான சுத்த சன்மார்க்க நெறியை இவ்வுலகிற்கு தந்துள்ளார். இதை உணர்ந்து உலக மக்கள் அனைவரும் நலம் பெறலாம் என்பது உறுதி.


அன்பு சன்மார்க்கப் பெருமக்களே! போலியான மனிதர்களை வணங்குவதை தவிர்த்து தீப முன்னிலையில் இறைவன் விளங்குகிறார், என்பதை உணர்ந்து அந்த இறைவனுடன் ஒன்றெனக் கலந்த வள்ளலாரை தீப முன்னிலையில் பணிந்து வணங்கி நலம் பெறுவீர். (அருள்ஜோதி ஆனேன் என்று அரையப்பா முரசு! மருட்சார்பு தவிர்த்தேன் என்று அரையப்பா முரசு! என பெருமான் சொல்வதை நினைவில் கொள்ளவேண்டும்.