Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
சன்மார்க்கப் பணிக்கும் ஜீவகாருண்யப் பணிக்கும் இடையூறு செய்பவர்கள் குறித்து தாங்கள் கூறும் கருத்து என்ன?

அன்பு வேண்டுகோள்:- சன்மார்க்க அன்பர்களுக்கு அவர்களது குடும்பத்தினராலும் உறவினர்களாலும் பலவித எதிர்ப்புகள் உள்ளது. ஜீவகாருண்ய நெறியை தடுக்கும் எந்தவித உறவுகள் ஆனாலும் கடவுளால் தண்டிக்கப்படுவது நிச்சயம். எனவே ஜீவகாருண்ய நெறிக்கு எதிர்ப்பாக செயல்படாமல் இருப்பதே அவர்களுக்கு நலம் அளிக்கும். உறவினர்களின் தவறான அறிவுறுத்தலால் பல சன்மார்க்கக் குடும்பங்கள் ஒற்றுமை இல்லாது வாழ்வதை இன்றும் காணமுடிகிறது. அதுமட்டுமல்ல அப்படி இடையூறு செய்தவர்கள் பலவித துன்பங்களுக்கு ஆளாகிவருவதையும் காணமுடிகிறது. எனவே சன்மார்க்கத்திற்கு எதிரான செயல்பாடுகளை தவிர்த்தலே நலம் பயக்கும் என அந்த அன்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.