ஒருமுறை தருமச்சாலையில் பணிபுரிந்த அன்பர்களில் சிலர், தாளாத உடற்காய்ச்சலால் துன்புற்று அறையினுள் படுத்திருந்தனர். அதனையறிந்து ஆற்றா நெஞ்சினராகிய வள்ளற்பெருமானார், அவர்கள்பால், அணுகி, அப்பா! உமது சுரத்தை எம்மிடம் கொடுத்து விடுகிறாயா? என்பதாக ஒவ்வொருவரையும் கருணை ததும்ப கேட்டருளினார்கள். அதற்கு அவர்களோ, அவ்வாறு கேட்கும் வள்ளற்பெருமானின் பெருங்கருணைத் திறத்தை எண்ணி, உளம் கனிந்தவர்களாய் ஒன்றும் பேசவியலாது மவுனமாயிருந்தனர் இப்படியிருக்க, கருணை வள்ளல் நம்பெருமான், சாலை அறையினுள் புகுந்து தமது தேகத்தினைத் தீப்பிழம்பு வண்ணமாகக் காட்டியருளினார்கள்! அவ்வளவுதான்! அப்பணியாளர்களின் நோய் நொடிப்பொழுதில் நீங்கியது! உடன் வியந்து எழுந்து ஆனந்தமுற்ற அவர்கள், தத்தம் பணிகளை உளமுவந்து வழக்கம்போல் செய்யத்தொடங்கினார்கள். என்னே பெருமானின் பேரருள் பெருங்கருணைத் திறம்!.
3 Comments
T.G.Ramalingam
ramalingamtg1942@yahoo.co.in
தினசரி அகவல் பாராயணம் பண்ணுங்கள் கட்டாயம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
கருணைபுரிவார். இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மேல் சத்தியம்.......
தயவு
வணக்கம்.....