வடலூர், தமிழகம் மட்டுமின்றி சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிந்து கொண்ட உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள் எப்பொழுதும் வருகை தரும் ஒரு புண்ணிய பூமி ஆகும்.
சத்திய ஞான சபைக்குக் கிழக்கே எழுவார் மேடையை அடுத்து, சுத்த சன்மார்க்கக் கொடி பறக்கின்றது. ஆனால், அக்கொடி, பல இடங்களில் கிழிந்துள்ளது. 16.7.2015 அன்று, மாதப் பூச நாளன்று, அக்கொடியினைப் பார்த்தபோது, இந் நிலை இருந்தது. இவ்விதம் கிழிந்த நிலையில் பறந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியினைப் பார்க்குந்தோறும், சன்மார்க்க அன்பர்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கின்றது. கிழிந்து போன இந்த கொடியை மாற்றி புதிதாக ஒரு கொடியினை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது, எல்லா சன்மார்க்க அன்பர்களின் வேண்டுகோள். செவி சாய்ப்பார்களா அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய அலுவலர்கள் ?
சத்திய ஞான சபைக்குக் கிழக்கே எழுவார் மேடையை அடுத்து, சுத்த சன்மார்க்கக் கொடி பறக்கின்றது. ஆனால், அக்கொடி, பல இடங்களில் கிழிந்துள்ளது. 16.7.2015 அன்று, மாதப் பூச நாளன்று, அக்கொடியினைப் பார்த்தபோது, இந் நிலை இருந்தது. இவ்விதம் கிழிந்த நிலையில் பறந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியினைப் பார்க்குந்தோறும், சன்மார்க்க அன்பர்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கின்றது. கிழிந்து போன இந்த கொடியை மாற்றி புதிதாக ஒரு கொடியினை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது, எல்லா சன்மார்க்க அன்பர்களின் வேண்டுகோள். செவி சாய்ப்பார்களா அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய அலுவலர்கள் ?
4 Comments
த .கங்காதரன்
உண்மையில், புதிய சுத்த சன்மார்க்கக் கொடி அங்கு ஏற்றப்பட்டிருந்தால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும், இந்தக் கோரிக்கையினை ஏற்றுச் செயல்பட்ட, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலருக்கும் நன்றி....