அன்பர்களே!
நாம் நண்பர்களுடனோ அல்லது மற்றவர்களுடனோ பேசும் போது மாற்றுக் கருத்து ஏற்பட்டால் உடனே நம்மை பார்த்தோ அல்லது நாம் அவர்களை பார்த்தோ கேட்பது;
நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? நாலும் தெரிந்தவர் யார்?
தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படி சொல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும் நான்கு தான்.
அஃது யாதெனில்;
1. சாகாத கல்வியே கல்வி
2. ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவு.
3. மலம் 5 ம் வெல்லும் வல்லபம்.
4. வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளையவிளைவித்த தொழில்.
இந்த நான்கு உண்மைகள் சுத்த சன்மார்க்கத்தின் மரபுகள்.
இதை ஆண்டவரே வள்ளலாருக்கு உரைத்தார்கள். இதோ அது குறித்த பாடல்: எண்; 1369.
• சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
• தான்என அறிந்தஅறிவே
• தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
• தனித்தபூ ரணவல்லபம்
• வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
• விளையவிளை வித்ததொழிலே
• மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
• வியந்தடைந் துலகம்எல்லாம்
• மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
• வானவர மேஇன்பமாம்
• மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
• மரபென் றுரைத்தகுருவே
• தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
• தேற்றிஅருள் செய்தசிவமே
• சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
• தெய்வநட ராஜபதியே.
இங்கு குறிப்பிட்டுள்ள 5 மலங்கள் எவை என்றால்;
1.ஆணவம்.
2.கன்மம்
3.மாயை
4.மாமாயை
5.திரோதாயி
இங்கு நூல்களின் உதவியால் இவை குறித்து இயன்றவரை பார்ப்போம்;
காரிருள்-செருக்கு (இதணால் கோபம்/குரோதம்) – (அஞ்ஞானம்) – இயற்கையானது.
கன்மம் என்பது;
வெவ்வியவினை செயல்/தொழில் – பயனை விரும்பிச் செய்யும் சாத்திரப்படியான சடங்கு- செயற்கையானது
மாயை என்பது
மயக்கம் – வஞ்சக மனம் ( & தந்திரம்,ஏமாற்றம்) – இயற்கையில் செயற்கையானது
மாமாயை என்பது;
சுத்தமாயை –பொய்த்தோற்றம்- பிரபஞ்ச பொருள்களின் பொய்த்தோற்றம்
திரோதாயி என்பது;
மறைக்கை (திரை)- உலக அனுபவங்களை கொடுத்து உண்மையை மறைத்தல்.
வேகாத கால் ஆதி (முதலிய) கண்டு....
சாகாதலை, போகபுனல் வேகாத கால் குறித்து காணுதல் வேண்டும்.
அன்பர்களே!
எவர் ஒருவர் தானென்னும் அபிமானம் இல்லாமல் கோபம், குரோதம் கொள்ளாமல், சாத்திரத்தின் அடிப்படையில் அமையப்பெற்ற சமயமத சடங்குகளில் லட்சியம் வையாமல், வஞ்சக மனமில்லாமல், உலகப்பொருள்களின் போலித்தோற்ற மறைப்பை நீக்கி கொண்டவர்கள், உலக அனுபவங்களை கொடுத்து உண்மையை மறைத்துக் கொண்டுள்ள திரைகளை நீக்கி கொண்டவர்கள் 5 மலங்களையும் வென்றவர் ஆவார்.
அடுத்து எவர் ஒருவரிடம் உண்மை இரக்கம் உண்மை அன்பு உண்மை அருள் அமையப் பெறுகிறதோ அவரிடம் சாகா கல்வியை தெரிவிக்கும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் இம்மூன்றும் ஞான யோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர்.
ஒழுக்கம் நிரப்பி, சாகாத கல்வியே கல்வி என்றும், சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே என்றும் உண்மையை அறிய சொல்லும் சுத்தசன்மார்க்கத்தை தழுபவர் எவரோ அவரே
“” நாலும் தெரிந்தவர்கள்” ஆவார்கள்
நன்றியுடன் அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.
ஐந்து மலங்களைப் பற்றியும் சரியாகக் குறிப்பிடப்பட வில்லை. விளக்கமும் சரியானதல்ல.
1.ஆணவத்தின் இயல்பு நிலை உயிரின் இச்சை,ஞானம்,கிரியை என்னும் மூவகை ஆற்றல்களையும் செயல்பட விடாமல் முற்றிலும் தடுப்பதாகும்.மனித உடம்பு கிடைத்த பின்னர்தான் ஆணவமானது காமம்,குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் போன்றவற்றைச் செயல்படுத்தும்.
2.கன்மம் என்பது நல்வினை,தீவினை என்னும் இருள்சேர் இருவினையைக் குறிக்கும்.
3.மாயை என்பது 36 தத்துவங்களைத் தோற்றுவிப்பதற்கான அடிப்படை மூலப்பொருள்.கண்ணுக்குப் புலப்படாதது.
4.திரோதாயி என்பது ஆதி சத்தி எனப்படும் இறைவனின் மறைப்பாற்றல்.ஆணவம் உட்பட உடம்பு,உலகப் பொருட்களைக் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குவிக்கும் இறையாற்றலே திரோதாயி.உண்மையில் திரோதாயி சத்தி,தூய்மையான இறையாற்றலே என்றாலும் மாயையை இயக்கும் காரணத்தால் மலத்தினுள் ஒன்றாகக் கூறப்பட்டது.
5.மாமாயை என்பது சுத்த மாயையின் ஐந்து தத்துவங்கள் ஆவன.இவை மலமாகா.மாயேயம் என்பதுதான் ஐந்தாவதான மலம் ஆகும்.ஆதி சத்தி என்னும் திரோதாயி இயக்கும் மாயையின் பொருட்களான தனு(உடம்பு)கரண(உடல் உறுப்புக்கள்)புவன(உலகம்)போகங்(நுகர்வு)களைத்தான் மாயேயம் என்று குறிப்பிடுவர்.
வேகாத காலாதிகள்,ஞானயோகக் காட்சியால் பதியப்படும் அனுபவம் என்பதும் தவறு.வேகாத காலாதி கண்டு கொண்டு விளைய விளைவிக்கும் தொழிலே மெய்த்தொழில் என்று பாடலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.கண்டு என்பது மெய்ஞ்ஞானத்தால் கண்டு எனப்பொருள் கொள்ள வேண்டும்.
சாகாநிலையைப் பெற்ற சுத்த தேகிகள் மட்டுந்தான் ஐந்து மலத்தையும் வென்ற பூரண வல்லபர் ஆவார்கள்.
சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனலைப் பற்றி நான் ஏற்கனவே இந்த வலைதளத்தில் சுருக்கமாக விளக்கி யுள்ளேன்.வணக்கம். வாழ்க.
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் பற்றிய உபதேசக் குறிப்பில் என்ன கூறப்பட்டுள்ளன?ஆ.பா.பதிப்பில் உள்ளது வருமாறு.
47.மேற்குறித்த மூன்றும் பரமார்க்க மாகிய யோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள்.
42.அவைகளின் உண்மைப் பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம்.ஆகையால் இவை யோக அனுபவங்களே யென்று அறிய வேண்டு மென்பது இதே தலைப்பில் உள்ள வேறொரு குறிப்பு.
எனவே நீங்கள்தான் வள்ளலார் கூறாததைக் கூறிவிட்டு அதனை எங்கள் வள்ளலார் கூறிய கருத்து என்றால் என்றால் நீங்கள் உரிமை கொண்டாடும் வள்ளலார் யார்?
நீங்கள் குறிப்பிடும் வள்ளலார் உரைப்பகுதியில் உள்ளது எந்த வள்ளலாரின் உரைப்பகுதி?அது எங்கே உள்ளது?
மீண்டும் ஒருமுறை உரைப்பகுதி கூறுவதைக் கவனிக்க.
பர மார்க்கமாகிய யோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள்.இன்னொரு குறிப்பில் யோக அனுபவங்கள் எனப்படுகிறது.
ஆனால் எபிஜெ என்ன கூறுகிறார்?எவர் ஒருவரிடம் உண்மை இரக்கம்,உண்மை அன்பு,உண்மை அருள் அமையப் பெறுகிறதோ அவரிடம் சாகாக்கல்வியைத் தெரிவிக்கும் சாகாத்தலை,வேகாக்கால்.போகாப்புனல் இம்மூன்றும் ஞானயோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர் என்பது எபி ஜெயின் சொந்தக் கருத்தாகுமே யன்றி ஒருபோதும் வள்ளலார் கருத்தாகாது.பக்கம் 440-இல் உள்ளதை அப்படியே முடிந்தால் பதிவு செய்து உங்கள் வள்ளலாரின் கருத்தைத் தயவு செய்து உறுதி படுத்துங்கள்.
பரமார்க்கம் என்றால் என்ன?யோகக் காட்சி என்றால் என்ன?யோகானுபவங்களை விளக்க முடியுமா?
ஞானயோகம் என்றால் என்ன?வேகாத காலாதிகள் ஞானயோகக் காட்சியால் எப்படிப் பதிவு செய்யப்படும்?பதியப்படுவது வேறு.அனுபவிக்கப்படுவது வேறு.அனுபவம் என்பது தானே அழுந்தி அறியப்படும் ஒன்று.அனுபவத்தைப் பிறவற்றால் ஒருவரிடம் பதிக்க முடியாது.