ஞான சரியை விளக்க உரை
மரணமிலாப் பெருவாழ்வு.
சரவணானந்தா
திண்டுக்கல்.
தயவு
ஞான சரியை: ஞான உரை
இஃது
திரு அருட்பா ஆறாம் திருமுறையில்
அமையப் பெற்ற
நிறை இன்ப வாழ்வு தரும்
பாமாலை விளக்க நூல்
ஸ்ரீ முக ஆண்டு தைத்திங்கள்
14-ம் தினம் குருவாரம்
தைப்பூச விழா
(27-1-’94)
முதற்பதிப்பு 1975
இரண்டாம் பதிப்பு 1994
பதிப்பு-உரிமை
பிரதிகள் 2000
வெளியீடு:
தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை,
தயவு சத்திய ஞான கோட்டம்,
4, நாகசாமி அய்யர் சந்து,
திண்டுக்கல்-624 001.
அச்சிட்டோர்:
சாம் அச்சகம்,
20, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை-1.
தயவு
சத்திய வாக்கும் நித்திய வாழ்வும்
முகவுரை
ஞானசரியை என்றும் வாய்ப்பறையார்த்தல் என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் கூறப்படும் திருஅருட்பாவின் அக உண்மையை வழங்க உள்ளது இந்தச் சிறிய நூல்.
இதனை, அகநின்று அனகமாக நோக்கும்போது, இறை உண்மை நிறை வாழ்வு தரும் ஒன்றாகக் கண்டு கொள்ளலாகும். ஆகவேதான் இதற்கு இம்முகவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
நித்திய பரம்பொருளளைகிய இறையின் இயல் விளக்க நிறை உண்மை கொண்ட ஒரு சொல் தான் ஓம் என ஆன்றோர் வழி உலகம் கண்டு ஏற்று உள்ளது. இது, என்றும் அகல் வான்வெளி முற்றும் சதாஒலித்துக் கொண்டே யாவையும் ஆக்கிக் காத்து அழித்தும் வருகின்றது.
இம் முச்செயல் உண்மையைக் குறிக்க, அ,உ,ம் என்ற மூ ஒலிக்கூட்டடே ஓம் ஆகியுள்ளது என அருள் உணர்வால் கண்டிருந்தனர். இதனால் இந்த ஓங்கார மந்திரத்தின் அகப்பொருள் அருள் என்றே கொண்டனர். அது உடல், உயிர் உள்ùளளைளி லையை உணர்த்தி, அதுவாகிடச் செய்தது அந்நாள் பக்குவ மனிதனை!
அதுவா இறை மந்திரம் அருளும் நிளை அனுபவ நிலை? ஆம், எனக் கொண்டு அகம் சூழ்ந்து போனான் அன்றைய ஞானி. ஆனால், அம் மந்திர ஒலியோ இடையறாது என்றும் ஒலித்துக் கொண்டே, முத்தொழில் புரிந்து வருகின்றதை அறிகின்றோம்.
ஆகையால், அருள் தந்த பொருள், நித்தியமான ஒன்றாய் இருக்கவேண்டும். அந்த நித்திய வாழ்வு தரும் பொருள், அருள் நிலையாய் இருக்க முடியாது, வேறு ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என அவ் அருúள உணர்த்துகின்றது! அது, அவ்வருள் நிலையிலிருந்து சதா வெளியாகிக் கொண்டே இருக்கும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என உணர்த்தப் பெறுகின்றோம் இன்று!
ஓம் மந்திர உள்ùளளைளி நிலை ம் எனவும் அதினின்றே உகர, அலைகள் சதா வெளியாகிக் கொண்டிருத்தலின், ஓங்கார மந்திரமும், அதன் முத்தொழிற் செயல்களும் வெளியாகிக் கொண்டே இருத்தல் நித்தியமேயாம்.
அப்படி அகமிருந்து அனகமாக வெளிவந்து விளங்கிடும் பொருள் கொண்ட ஒரு சொல் தயவு ஆன ஒன்றே ஆம். ம் எனும் மகரமெய்யே தகராகாச இறை ஜோதிப் பெருவடிவமாகும், அது மனிதனின் தலை நடு, யகர ஆன்ம ஒளியாய்த் தோற்றி உகர உயிர் உடம்பு கொண்டு திகழ்கின்றதாம். ஆகையால், ஓங்கார மந்திர அனக தயவு மூலம் மனிதன் நித்திய வாழ்வு பெறுவது நிச்சயமே!
இவ்வுண்மையையுணர்த்தி, அனுபவ வாழ்வு பெறச் செய்யும் நோக்கோடு தான், திரிதேக சித்தி பெற்ற வள்ளல் அருட்பிரகாசர், திருஅருட்பாவில் இந்தப் பாமாலையை அந்தாதி முறையில் அருளி சுழன்றிலங்கச் செய்துள்ளளைர். ஆகவே, இதனை இருபொருள் அனுபவமும் உண்டாக உள்ளுணர்ந்து ஓதிப் பயன் கொள்ள வேண்டும்.
முதலில் சத்விசாரத்தால் ஓங்கார அகப்பொருளை அருட்பெருஞ் ஜோதியாகத் தலைநடுவுள்ùளளைளியாகக் கண்டு அதுவாகி நிற்க வேண்டும். அந்நிலை நின்றே தயவினால் தினசரி வாழ்வை நடத்தப் பழகல்வேண்டுவது அவசியம்.
கடவுள் உண்மைதான், நம் சிரநடுவுள் சிற்றம்பல ஜோதியாகவும், பிற எல்லாத் தெய்வ, தெய்வீக மனித உண்மையாகவும் கண்டு கண்டு, போற்றி, உட்கூடி நின்று தயை பெருகப் பெருக வாழ்தல் வேண்டும்.
வேறு வேறான புறச் சந்நிதிகளிலே, கற்பனா தெய்வப் பீடங்களின் முன் நின்று முறையிடுவதாலும், தோத்தரிப்பதாலும், வேண்டிக் கொள்ளுவதாலும் பெற முடியாத உண்மைவிளக்கமும், அனுபவமும் அகஜோதிபதியிடமிருந்து அடைந்திடலாகும்.
வடலூர் வள்ளல், சத்திய ஞானத்தால் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு, ஆனந்தத் தெள்ளமுதுண்டு தான் சூழ இருக்கும் ஆன்ம நேயர்களை எல்லாம் மிக உறுக்கத்தோடும், உறுதியோடும் இங்கே வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார். இங்கே என்றால் எங்கே? புற வடலூருக்கா, அல்ல! சத்திய ஞானம் விளங்கும் தலை இடத்திற்கு! அங்கு தான் அவரும், அருட்ஜோதியும் இரண்டற இருக்கும் இடம் ஆம். அது.
தயாவொழுக்கத்தோடு கூடிய சத்விசாரத்தால், அவரையும், அவர் வாழிடத்தையும் கண்டு அடைய முடியும். அப்படி அகமிருந்துதான் மெய்ப்பொருளையும் அனுபவத்தையும் பெறமுடியும்! அனுபவத்தில், வாழ்வில் அடையப் பெறாதது, அர்த்தம் அற்றது, அனர்த்தமே, கேடும் அழிவுமே!
இதில் 28 பாடல்கள் தொடர்ந்து, சுற்றிச் சுற்றி வந்து உயிர் உடம்பைச் சுத்த, பிரணவ, ஞான உடலாக மாற்றித் தயவு அனுபவத்தோடே நிலவச் செய்யும் தன்மைத்தாம். இதனைத் தான் இதனைச் சத்தியவாக்கும், நித்திய வாழ்வும் என்ற தலைப்பு கொடுத்துச் சிறப்பிக்கச் செய்துள்úளளைம்.
முதற் பதிப்பில் தெளிவாகக் கண்டு கொள்ளப்படாது, இருந்த விளக்கம் மிகத் தெளிவாகவும், எடுப்பான தடித்த எழுத்துக்களளைலும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளை மேலெழுந்த வாரியாகப் படிக்கும் போதே உண்மையைக் கண்டு கொள்ளலாம்!
இதன் விளக்கத்தைப் பிறரும் நன்கு அறிந்து ஏற்கப் பன்மொழியிலும் வெளியிடலாம். அது கொண்டு நம் வள்ளலாரையும், அவரது திருவருட்பாவின் உண்மையையும், அவரது மரணமில்லா வாழ்வின் சாத்தியப் பேறையும் உலகம் எல்லாம் அறிந்து பெரும் பயன் அடையலாகும்.
பழம் கற்பனா நெறிமுறைகளளைல், உலகம் சீர்கெட்டு அழிகின்ற நிலை மாறி, தயா ஒளி பெற்று இன்பில் தழைத்தோங்கும் என்பது சத்தியம்.
விளைக தனிப் பெருந் தயவு
தயவு இவண்
சத்திய ஞான கோட்டம் தயாநேயன்
திண்டுக்கல்
20-1-94 சரவணானந்தா
தயவு
ஞான சரியை
தலைப்பு விளக்கம்
அன்பு ஒளிரும் ஆறறிவு நிரம்பிய மனிதர்களளைய் விளங்கும் யாவரும் நல்லின்ப வாழ்வு பெற்று, ஒத்து வாழ வேண்டும். இதுவே இறைவன் திருவுள்ளம் என உண்மை மெய்ஞ்ஞானிகள் ஓதுகின்றார்கள்.
இவ்வுலகில், அந்த இறை இன்ப வாழ்வு வருவித்தற் பொருட்டு, பல்வேறு கொள்கை கோட்பாடுகள், பலப் பலரால் வகுத்து வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் உண்மையைக் கொண்ட ஆன்ம ஞானிகள் தந்துள்ள “சன்மார்க்க ஞான நெறியே” யாவர்க்கும் பயன்படுவதாக உள்ளதாம். இந்த ஞானத்தில் கடவுள் விளக்கம் அகத்தில் கண்டு, புற வாழ்வில் விரித்துக் கொள்ளப் படுகின்றதாம்.
மேற்படி ஞான பக்குவம் வருவதற்கும், முடிந்த அனுபவம் உண்டாவதற்கும், நான்கு நான்கு படிகள் கொண்ட நான்கு நிலைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
அவை, “சரியை, கிரியை, யோகம், ஞானம்” என்ற நான்கு நிலைகளும், அவற்றில் ஒவ்வொன்றிலும், இந்த நான்கும் பயின்று வர
சரியையில் - சரியை, கிரியை, யோகம், ஞானம் :
கிரியையில் - சரியை, கிரியை, யோகம், ஞானம் :
யோகத்தில் - சரியை, கிரியை, யோகம், ஞானம் :
ஞானத்தில் - சரியை, கிரியை, யோகம், ஞானம் :
என்பனவாம்.
1. சரியை:- உலக வாழ்வில் திருத் தொண்டு புரிதல் நல்ல சரியை யாம். பக்தி நெறியாளர் கோவிற் பணியே இதுவாகக் கொள்கின்றனர். “உண்மைக் கடவுளுக்கு உயிருடம்பே ஆலயமாய்” இருப்பதால் “ஆருயிர்த் தொண்டே அருஞ் சரியை” என்று கொள்ள வேண்டும்.
2. கிரியை:- இது போல் தெய்வ ஆராதனை “உயிர் விளக்கம் செய்தல் ஒன்றே” ஆதலின் அதுவே நற்கிரியையாகக் கொள்ளப்படும்.
3. யோகம்:- மேல், நல்லொழுக்கத்துடன் இருந்து அருட்சக்தியைப் பெறுவதே மெய் யோகமாக அமைவதாம்.
4. ஞானம்:- “அந்த அருளளைலே உண்மைக் கடவுள் ஒளியில் பொருந்தி நின்று உலவா இன்பில் வாழ்வதே ஞானப்பயனாம்”
இந்த நான்கு நிலையில் முறையாகப் பயின்றால், “சாலோக, சாமீப, சாரூப சாயுச்சிய நிலை” அடையலாம் என்பர். உண்மையான அருட் பெரும்பதியை உணர்ந்து, அடைந்து அத்துவிதானந்த வாழ்வு பெற வேண்டியது ஒன்றே நம் குறிக்கோளளைக உள்ளதால், மேற்படி சாதனா சாத்தியம் உண்டாக, யாவரும் வாழ்க்கை நடத்த வேண்டும். “சாதனா முறை சத்விசாரத்தாலும், சாத்தியமுறை பரோபகாரத்தாலும் சித்திப்பதாக உள்ளனவாம்.
“ஜீவ தயா ஒழுக்கத்தோடு சத்விசாரம் செய்தால், நாம் நான்காவது ஆகிய ஞான நிலையில் இருந்து கொண்டு, சாதனை புரிகின்றதாக உணர்ந்து கொள்வோம். இதுவே “ஞானசரியா” நிலையாம். இந்த நிலையிலிருந்து உலகியலை நடத்த, நடத்த, மெய்யன்பும், மெய்யறிவும் விளைவு கொள்ளும். இந் நிலையிலிருந்தேத ஞானகிரியையும், ஞான யோகமும் சத்விசாரப் பயனாக விளைவு கொள்ளும். பின், சுத்த தயா அனுபவத்தால் ஞானஞானமாகிய பேரின்ப நில சாத்தியமாகும்”
இங்கு, நம் வள்ளல் பெருமான், ஞானசரியை என்ற தலைப்பை எடுத்துக் கொண்டு, சுத்த சன்மார்க்கத்தின் முதற் கூறாகிய “சாதனா விளக்கம்” நன்கு அருள்கின்றார். இதில் சத்விசார நிலையும், இயலும், பயனும் தெள்ளத் தெளிய விரிக்கப்படுகின்றனவாம்.
புற நெறியாளர் இதுவரை காணா, அனக நெறியுண்மை நன்கு எடுத்து ஓத வந்தது இப்பகுதி. நாம், தயா வண்ணராம் பதியை முதலாகக் கொண்டு தோன்றியுள்ளவர்கள். அந்தப் பதியை அனுபவத்தில் கொண்டு வாழ்வதற்கும் சுத்த தயவே நெறியாகக் கொண்டு சூழ வேண்டுவது நம் கடமையாம்.
இந்த நம் ஆன்மா, எட்டோடு இரண்டு சேர்ந்த பத்தின் (அ8 + உ2 - ய : 10) உருவாய் உள்ளது எனப்படும். இதில் எட்டு அகர எழுத்தாகி, கடவுள் உண்மை வடிவாக உள்ளதாய் மொழியப்படும். அத்தோடு உள்ள இரண்டு உகரமாய்த் திகழ்ந்து, அருள் உணர்வாய் விளைந்து அகர பதியைக் கண்டு கொள்வதாம். இது தான் யகரம் சுட்ட வந்த கடவுளளைன்ம உண்மை என்ப.
இந்த ஞான சரியைப் பகுதியில் மேற்படி ஆன்மக் கடவுள் அனபவம் பெறப்பட வேண்டியுள்ளதால் “அருள் துணையே” முதலில் நாடப்படுகின்றது. அருளைக் கொண்டு அறிந்தடைதல் முறையே. தாயைக் கொண்டு தந்தையை அறிந்து கொள்வது போல்வதாம்.
இங்கு உகரமும், அகரமும் வரிசைப்படுத்தி நிறுத்திய போது உஅ(28) 28 ஆக விளங்கக் காண்கின்றோம். இவ்விருபத்தெட்டுமே இந்த ஞானசரியைக்கு 28 செய்யுள் வகுக்கப்படக் காரணமாய் அமைந்தன. மேலும் இவ்விருபத்தெட்டு செய்யுட்களும், அந்தாதி முறையில் அணிபெற கோவை செய்து வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஒவ்வொரு பாவும், எண்சீர் அடியான் வந்து எட்டாகிய அகர பதியின் இலட்சணத்தை ஞான சரியாதி நான்கினும் கண்டு கொள்ள உதவுகின்றன. அன்றியும், இருபத்தெட்டு என்று கூறும் போது, இரண்டு (பத்து) எட்டு என்று ஒலி வடிவில் மட்டும் காண்கின்றோம். இது நம் தமிழ் முறையில் (உயஅ) முன்பும் வழக்கில் இருந்து வந்ததே யாம்.
ஆன்ம ஞானம் விளங்கிய காலம் அதுவாக இருந்ததால், அப்படி யகரமாகிய ஆன்ம எழுத்தெண் வெளிப்படக் குறிக்கப்பட்டதோ, என எண்ணத் தோன்றுகின்றது. அதே காரண நிமித்தம் இன்று, அவ்வான்ம ஞானம் மறைந்து கிடத்தலின், இந்த இருபத்தெட்டின் இடை நின்ற பத்து (ய) இல்லை யாம்படி ஆயிற்று போலும்!
மேலும், கடவுள் உள்ளதாக மறைந்து இருக்கின்றதால், அதனை எடுத்துக் கூற (வந்த) முயன்ற ஞான நூலை மறை என இயம்பினர் போலும். அந்த மறையில் மறைந்து கிடக்கும் மறை பொருளளைகிய அக் கடவுளை அறிந்து அடைவதற்கு உரை நூலாக செய்யப்பட்டன, ஆகமங்கள்.
செம்பொருட் சிவபதியைக் காட்டி கூட்டி வைக்கும் சைவ ஆகமங்கள் இருபத்தெட்டே என்பர். அவ்வாகமங்கள் ஒவ்வொன்றும் பெரும் கலை ஞானப் பெட்டகங்களளைய் இருப்பனவாம். அக்கலை ஞானங்களை ஓர்ந்து பற்றி பயன் காண்பது எளிதல்ல.
இவற்றிற்காக வேண்டி, எத்தனை, எத்தனை கலைக்கூடங்கள், சிற்ப ஆலயங்கள், குரு பீடங்கள், சந்நிதானங்கள். அவற்றிற்கான நூல் முதலியனவும், விக்கிரகங்கள் முதலியனவும், குரு மகா சன்னிதானங்களும், ஆசிரியர்களும் தோன்றியுள்ளளைர்கள்.
இவைகளளைலும், இவர்களளைலும் பன்னெடுங்காலம் பயிற்றுவிக்கப்பட்டும், கடைபிடித்து ஒழுக விதிக்கப்பட்டும் அந்த மாமறைச் ஜோதியினைக் கண்டு அடைவது அருமையாய் இருக்கின்றதாம்.
ஏனெனில், இவ்வாகம வழியில் சென்றவர்கள் கடின பாடுபட்டு உழைத்துக் கண்ட பயன் அற்பமாய்ப் புறத்ததாய் நின்றுவிட்டதாம். புற பக்தி வழிப்பாட்டிற்காம் பலவாகிய, தந்திர, மந்திர, சாஸ்திர, ஸ்தோத்திர நூல்கள் பெருகின. அதனால் அப்படியாக நேர்ந்ததாம்.
அகவுண்மையைக் வற வந்த யோக ஞான கலைகளும் கூட மனிதனை, அகத்தில் மூழ்கடித்து விட்டனவே, என் செய்வது! அவை புறத்தில் ஓரளவு சிறப்பொடு வாழ்வித்தன, சிறிது காலம். பின்னர் ஒடுக்கி விட்டனவாம்.
“ஆகம நெறியிற் கண்ட உண்மை பூர்ணமாக வெளிப்பட்டு பயன் வழங்கவில்லை.” ஏகதேச வெளிப்பாட்டால் ஏகதேசச் சித்தி நலன் காணப்பட்டது உண்மையே. ஆனால், அந்த ஆகம நெறி உலகப் பொது நெறியாகக் கூடாது போயது. ஏனெனில் அது, அகமிருக்கும் ஒன்றான உண்மையிலிருந்து அனகமுற விரியவில்லை; புறச் சூழலால் பலவாகத் தோன்றி, ஒன்றான நிலை பேறு அறியக் கூடாது மறைந்ததாம்.
இது சமயம் “சுத்த சன்மார்க்க அனக நெறி” தோன்றி உள்ளதால், மறையாகமம் வழங்கற்கரிய மாண்பொருள் நம் கைவரப் பெறுவோமாக. அதற்கென்றே நம் அருட் பிரகாச வள்ளல் பெருமான், வேதத்தின் அந்தமும், ஆகமாந்தமும் உரைத்ததற்கரிய அனுபவ அருட்பெரும் பொருளை இந்த ஞானசரியை மாலையில் இருபத்தெட்டு அருட்ஜோதி மணிகளளைகப் பதித்து ஒளிர வைத்துள்ளளைர்.
எவரும், சமயச் மதச் சார்பு கொண்டு நோக்காது அருட்பெரும் பதியை உள்ளவாறு கண்டடையும் நோக்கோடு இம்மாலையை பன்முறை நன்முறையில் ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓத ஓத ஒருமை உண்டாம். அந்த ஒருமையில் தயா நெகிழ்வும் தோன்றும் போது உண்மை எல்லாம் விளங்கும். ஞானசரியை இது தான் என உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்.
இதில் அடங்கிய இருபத்தெட்டு பாடல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு விளக்கம் செய்ய முற்படுவோம். “இங்கு குறிக்கப்பட உள்ளது புறச் சான்றுகள் பல கொண்ட விரிவான உரைகளளைகா.” அஃது கலை அறிஞர் ஏராளமாய்த் தருவார்கள். அவற்றால் நமக்கு அக உண்மை சிறிதும் விளங்காது. பெருநன்மையும் உண்டாகாது.
“அருள் வேண்டும் நமக்கு. அவ்வருள் கொண்டு காண அகச்சான்று போதுமானது வழங்கப் பெறுகின்றோம்.” இந்த அனக மாலையிலும், மற்ற நம் வள்ளல் தந்துள்ள பாக்களிலும், நம் ஒவ்வொருவருடைய அகத்திலுமே ஒளிர்கின்றது உண்மையான அகச்சான்று அந்த ஒப்பற்ற அகச்சான்றாம் தயா பெருஞ் ஜோதியை ஒன்றி நின்று தான், இங்கு இச் செய்யுட்களுக்கு மெய்ப் பொருள் காணலாகின்றதாம்.
ஆதலின் இவ்வுரைத் துணையால் கடவுள் தயவும் அத் தயவால் “அனகானந்த அனுபவமும்” பெற்றுக் கொள்வீர்கள். பொருள் விளக்கம் எளிதாகக் காணலாம். கண்டு கொண்டால் “திருஅருட்பாவின் இதயம் இதுவே” எனவும் தெளிந்து கொள்ளலாம். உலகுக்கு ஆண்டவர் அருள் வெளிப்படுகின்ற சமயம் அடுத்துள்ளது.
வாய்ப்பறை ஆர்த்தல்
ஒரு செய்தியை உலகுக்குத் தெரிவிக்க வேண்டின், விளம்பரம் அவசியமாம். பறை அடித்துக் கூறுதல் பழமுறை. கற்றார்க்கும் கல்லாதார்க்கும் எளிதில் தெரியப்படுத்த, அம்முறை அக்காலத்தில் பொருத்தமாகவே இருந்ததாம். இக்காலத்தில், ஒலி பெருக்கி முதலிய சாதனங்கள், முக்கிய சங்கதிகளை உலகுக்கு அதி விரைவில் தெரியப்படுத்தி விடுகின்றன. இன்னும் எளிதில் மொழி அறியார்க்கும் தெரியப்படுத்தும் வண்ணம் தொலைக்காட்சி (பங்ப்ங்ஸ்ண்ள்ண்ர்ய்) உதவ உள்ளது.
இவ்வளவாலும் அறியப்பட உள்ளவை புற விஷயங்கúள. உலகியல் சிறு பயன் தருபவைகúள. நமது குறிக்கோள் அகத்திருந்து அனகப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அதனை எப்படி விளம்பரப்படுத்தலாம் என்றால், உண்மை உரைப்பதால் ஆம் என்க.
“உண்மை உரை செய்தலாவது, அக ஒளியைப் பரப்புதலாம்”.
திருவாய் மலர்தல் என்பதின் உட்பொருளும் இதுவே. அதிலிருந்து தயவோடு உரைக்கின்ற ஒவ்வொரு சொல்லும், புறப் பரையார்த்து உரைப்பதை விட, வானொலி பரப்புதலை விடச் சக்தி வாய்ந்ததாய் ஒவ்வொருவரின் உள்ளத்தும் பதிக்கப் பெற்று விளங்குவதாய் உள்ளது.
ஆதலின், நம் வள்ளல் வாய்ப்பறை ஆர்த்த இப் பாமொழிகள் உலகோர் எல்லோர் உள்ளத்தும் பரப்பப்பட்டு, பதிவு செய்யப்பட்டு என்றென்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றதாகும்.
“ஒருமையும் தயவும் கொண்டு தளியில் உற்றுப் பார்த்தால், இந்தச் செய்யுள்களையும், இவற்றால் சுட்டாமல் சுட்டுப்படுகின்ற கடவுளையும் கண்டு கொள்ளலாம். வாய்ப்பறையின் உண்மை இதுவாம்”.
இதுவன்றிப் புலனெறியாளர் தம் வாய்ப்பறை சிறப்பற்றதாம். அவர்கள் தம் வாயே பறையாக, நாக்கடிப்பால் ஆரவாரஞ் செய்து ஒலிப்பனவற்றால் பெரும்பயன் உண்டாக மாட்டா என அறிதல் வேண்டும்.
அருட் பெரும் பயனை அடைவித்தற் பொருட்டே, நம் வள்ளல் வாய்ப்பறை யார்த்தார், ஆர்க்கின்றார், என்றும் ஆர்ப்பார். உள்ளப் பொறியில் தயாஒளி உருவாய்ப் பாவின் பொருளளைய் நம் பதியே ஒளிர்கின்றார். இக்காட்சி, கண்ணால் காணவல்ல புலக்காட்சி அன்று. தயா ஞானமாகிய கண்ணால் மெய்ப்படக் காண வேண்டி உள்ளதாம்.
“இந்தக் கண் தயா விசாரத்தால் திறக்கப் பெறும். ஆகையால், தயவோடு இருந்து விசாரஞ் செய்வோம். கடவுளிடத்து, உண்மைளை விளக்கி வழங்கும்படி விண்ணப்பித்துக் கொண்டு இருப்போம். அத்தோடு அருட்பாக்களையும் ஒருமையுடன் ஓதிக் கொண்டு வருவோம். அப்படிச் செய்து கொண்டே வந்தால், நம் தயாபதி நம் கண்ணை நன்கு திறப்பித்து அருள்வார். தயவு ஞானக் கண்ணைத் திறப்பித்து உண்மையை எல்லாம் கண்டு கொள்ளவும் செய்வார்”.
இப்படியாகத்தான் இந்த ஞானசரியைப் பாடல்களின் பொருளைத் தெரிந்து தெளிதல் வேண்டி உள்ளதாகும். இந்த நிலையிலிருந்து கொண்டு காணும் மெய்ப்பொருள், புலனெறியில் பயின்றுள்ளவர்களுக்கு ஏகதேசப் புற வண்ணமாகத் தோன்றுவது அன்றி, அக உண்மை வண்ணமாகக் கண்டு கொள்ள முடிகின்றதில்லை. எங்கும் தயா பெருஞ்ஜோதியாய், அகமிருந்து, அனக நிறைவாய் உள்ள கடவுளை புறத்தில் எப்படிக் காண முடியும்?
“புறத்தில் காண்ப தெல்லாம் அந்தக்
கடவுளின் மிகச்சிறு சிறு கூறே யல்லாமல்
பூரணம் அல்லவாம்”
ஆதலின், அப் பூரணப் பொருளை அருளளைலே அகத்தில் கண்டு கொள்ளுவோம். அதனோடு கலந்து ஒன்றி நின்று இந்த ஞான சரியா மாலையை நுண்ணிதாகத் துருவிப் பேசப்படாப் பொருளை உளம் கொண்டு மகிழ்வோமாக.
பா விளக்கம்
ஞான சரியை - செய்யுள்:
பாடல்.1
. நினைந்துநினைந் துணர்ந்து
நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்
ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே
நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை
நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதுநாம்
வம்மினுல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில்
வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன்
சத்தியம்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில்
புகுந்தருண மிதுவே.
உரை: ‘வம்மின் உலகியலீர்’, என்று உலகிலுள்ள எல்லோரையும் வரவேற்கின்றார். அன்று என்றோ ஓர் நாள், ஏதோ ஓரிடத்தில் இருந்து கொண்டு, உலகில் அப்பொழுது இருந்தவர்களை மட்டுமா வரவேற்றார்?
அல்ல. நித்தியமாக அருட் பெருஞ் ஜோதி விளங்கும் பதிக்கண் இருந்து கொண்டு, அன்றும், இன்றும், என்றும் வரவேற்கின்றார் வரவேற்றுக் கொண்டேயிருக்கின்றார், எக்காலத்தவரையும் எவ்விடத்தவரையும்.
இப்படி எதற்காக எல்லோரையும் வரவேற்றுக் கொண்டேயிருக்கின்றார்? என்றால்.
“மரண&