HyperLink HyperLink

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வள்ளலாரின் புகழ் பாடிய மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அவர்கள்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வள்ளலாரின் புகழ் பாடிய மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அவர்கள்.

மதுரையில் சன் டி.வி அலுவலகத்தின் பின்புறம் கருணை-சபை-சாலை கட்டும் விசேடத்திற்கு 14.9.2008 சென்றிருந்த போது, அவ் வைபவத்தில் கலந்து கொள்ள தயவு விஜயராமனும் வருகை தந்திருந்தார்.

செல்லும் வழியில் ஒரு அரசியல் கட்சி மாநாடு மதுரையில்,  15.9.2008 அன்று நடைபெறுவது குறித்து ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.

அதில், எல்லா ப்ளெக்ஸ் பேனர்களிலும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு C.N. அண்ணாத்துரை அவர்களின் படமும், அவரது

பொன்மொழிகளும் மதுரை நகரை அலங்கரித்தன.

15.9.2008ம் நாள் அவரது 100 வது;ஆண்டு விழா நாள் என்ற விதத்தில் இந்த நிகழ்ச்சி மதுரையில் நடைபெறுவதற்கு இந்த பேனர்கள்

வைக்கப்பட்டிருந்தன.

அவரது, பொன்மொழிகள் எல்லாவற்றிலுமே அவர், பொதுநல நோக்கு, தொலை நோக்குச் சிந்தனை சமுதாயத்தில், ஏழை எளிய மக்களின்  

முன்னேற்றம் முதலானவற்றை வெளிப்படுத்தி இருந்தார்.

ஒரு ப்ளெக்ஸ் பேனரில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்கள், யேல் பல்கலைக்கழகத்தில் ஒரு பதிவேட்டை புரட்டிக்

கொண்டிருப்பது போல புகைப்படம் இருந்தது.

அவர்கள் தமிழ்நாட்டினை ஆண்டு கொண்டிருந்த போது, அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்கு

சென்றிருந்தார்கள் என்ற விபரம் குறித்து பேச்சு வந்த போது, தயவு விஜயராமன் சொன்னார் - அங்கு சென்றவுடன் பேரறிஞரிடம்

அங்குள்ளவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள், திரு அருட்பிரகாச வள்ளலார் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளேன் என்று வள்ளற் பெருமானின்

மாண்பினை எடுத்துச் சொன்னாராம்.

வள்ளலாரிடம் அவருக்கு என்னே பற்று.

Title:
 
Comment:
 
(* login required)

    No results found.