<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

கோயம்புத்தூர் புத்தக விழாவில் வள்ளலாரின் திரு அருட்பா விற்பனை 14.8.2008 துவங்கியது

Ramanujam
posted 41 months ago
14 Aug 2008 11:02:03 GMT 11:02:03 AM

1812 views


கோயம்புத்தூரில் புத்தகத் திருவிழா, 2008.

 

திரு அருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் மற்றும்

 

திண்டுக்கல் சரவணானந்தா அவர்கள் எழுதிய தயவு நூல்கள்

 

கோயம்புத்தூர் புத்தக விழாவில் விற்பனை.

 

இடம் – கோயம்புத்தூர் காந்திபுரம் (பஸ் ஸ்டாண்டின் எதிரே) உள்ள மைதானம்.

 

காலம் – 14.8.2008 முதல் 24.8.2008

 

நேரம் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

 

ஸ்டால் எண்.103

 

திரு அருட்பிரகாச வள்ளலாரின் திரு அருட்பா மற்றும் உபதேசங்கள், அதன் பேரில் ஏனைய சன்மார்க்க சான்றோர்கள் எழுதிய உரை விளக்கங்கள் மற்றும், திண்டுக்கல் தயாநிதி சரவணானந்தா அவர்கள் எழுதிய திரு அருட்பா பாடல்களுக்கான உரை நூல்களும், தயவு என்ற தத்துவங்கள் அடங்கிய நூல்களும் கோயம்புத்தூரில் 14.8.2008 முதல் 11 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி விழாவில் இடம் பெற்றன.

 

 இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை, கோயம்புத்தூரில் வாழும் சன்மார்க்க அன்பர்கள் (1) திரு சிவக்குமார் (2) அவரது துணைவியார் திருமதி தமிழரசி (3) திரு பிரபாகரன் மற்றும் (4) திரு சாயி கணேஷ், மதுரை (தற்போது சென்னை) மற்றும், கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வரும் சன்மார்க்கச் சான்றோர் திரு ராம்தாஸ் அவர்கள் மேற்கொண்டனர்.

 

திண்டுக்கல்லில் தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம், சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய புத்தகங்களை, சலுகை விலையில், இந்த புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்வதற்கு ஒப்புக்கொண்டு, புத்தகங்களை, கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்தார்.

 

திண்டுக்கல் சரவணானந்தா அவர்கள், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் பெரும்பாலான பாக்களுக்கு உரை விளக்கம் எழுதியுள்ளார்கள். அவற்றில் சில கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

 

(1) அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை

(2) அருட்பெருஞ்ஜோதி அட்டகம்.

(3) ஞான சரியை

(4) தற்சுதந்திரமின்மை

(5) அருள் விளக்கமாலை

(6) திருப்பள்ளி எழுச்சி          – இன்னும் பல.. .. ..

 

அவர்கள் தாம் எழுதிய பாக்கள் மற்றும் உரைவிளக்க நூல்கள்

 

(1) தயவுப் பாக்கள்

(2) தயவுக் குறள்

(3) தயவுப் பெரு நெறி

(4) திருக்கதவம் திறத்தல்.

(5) மனிதன் யார் ?

(6) குருவிலக்கணம்

(7) மெய்

(8) சுத்த சன்மார்க்கப் பதி வருகை

(9) சத்திய ஞான சபைத் தத்துவ விளக்கம்.

 

14.8.2008 அன்று மாலை சுமார் 5.30 மணியளவில், புத்தகக் கண்காட்சி துவங்கியது. மேலே குறிப்பிட்ட அன்பர்கள் பெரும்பாலானோர், மேற்படி புத்தகக் கண்காட்சியில் அருட்பா விளக்க நூல்கள் மற்றும் தயவுத் தத்துவ விளக்க நூல்களை விற்றனர்.

 

இந்த புத்தக விழாவிற்கு அனைவரும் வருகை தந்து, திரு அருட்பிரகாச வள்ளலாரின் நூல்களையும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களில் தயவுத் தத்துவ நூல்களையும் இப் புத்தக விழாவில் வாங்கி, தமது தினசரி வாழ்வில் சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடித்து இறவா நிலையினை அடைய வேண்டும்.

 

அனைவரும் வருக ! இறவா நிலை பெறுக !!
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Events & Meetings

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace