கடலூர் திரு அப்பாசாமி செட்டியாருக்கு பெருமான் எழுதிய கடிதம்.
Ramanujam
posted 42 months ago
21 Jul 2008 10:56:45 GMT 10:56:45 AM
1822 views
கடலூர் திரு அப்பாசாமி செட்டியார் வீட்டில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் எழுதிய கடிதங்கள், நோட்டுப் புத்தகம்.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் தமது காலத்தில், வடலூரைச் சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் அவ்வப்போது சென்று வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
அவ்விதம் செல்லுமிடங்களிலெல்லாம் அன்பர்களை நல் வழிப்படுத்தி, சுத்த சன்மார்க்கப் பாதையில் அவர்களையும் இட்டுச் சென்றார்கள். அவ்விதம், அவர்கள், கடலூர் திரு அப்பாசாமி செட்டியார் வீட்டிற்கும் சென்றுள்ளார்கள்.
அங்கு, பெருமானார் தங்கிய கட்டிடம் ஒரு திருமண மண்டபமாக தற்போது கட்டப்பட்டுள்ளது. அத் திருமண மண்டபத்தின் உள்ளே, பெருமானார் தங்கிய இடத்தை மட்டும் ஒரு அறையாகத் தடுத்து, பெருமான் கொடுத்த தீபக் கூண்டு, திருநீற்று மடல் ஆகியவற்றை பத்திரமாகப் பாதுகாத்து, வழிபாடு செய்து வருகின்றனர்.
திரு அப்பாசாமி செட்டியாரின் வழித் தோன்றலாக தற்போது உள்ள திரு கணேசன் என்பவரின் இல்லத்தில், பெருமான், திரு அப்பாசாமி செட்டியாருக்கு தமது கைப்பட எழுதிய கடிதங்கள் உள்ளன.
மேலும், அவர்கள் தம் கைப்பட திரு அருட்பாவில், சில பாடல்கள் எழுதி வைத்துள்ள நோட்டுப் புத்தகமும் அங்கு உள்ளன.
பெருமான் எழுதிய கடிதம் மற்றும் திரு அருட்பா பாடல்கள் எழுதி வைத்துள்ள நோட்டுப் புத்தகம் ஆகியவற்றின் போட்டோ பிரதி, அன்பர்களின் பார்வைக்காக இத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
http://www.vallalarfiles.com/image/IDgQ3hwC,$,2bTstMGWxcctn6Q,$,3d,$,3d/sz-tn650/Vallalarwr11820000.jpg
http://www.vallalarfiles.com/image/BbMdwpYHncrhv7nSinuLpQ,$,3d,$,3d/sz-tn650/VallalarOr11840000.jpg
http://www.vallalarfiles.com/image/vg1JBHBIKWx2WTbLDAZg1Q,$,3d,$,3d/sz-tn650/VallalarOr11860000.jpg
http://www.vallalarfiles.com/image/QlK8uVOrYyODjEkTReUvCA,$,3d,$,3d/sz-tn650/VallalarOr11880000.jpg