Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
முக்தியும் சித்தியும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

முக்தியும் சித்தியும்

முன்னுரை

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் ஒவ்வொரு ஆன்மாவும் தகுந்த நேரத்தில்/ காலத்தில் பக்குவம் பெற்று சுத்த சன்மார்க்க உணர்வு அடைந்து (இறைவனை எல்லா உயிர்களிலும் காணும் பக்குவம்) அருளியல் வாழ்வில் ஈடுபட்டு வருகிறதாம். எனவே பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை எல்லா காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும்,விலகாமல் பார்த்துக்கொள்ளும் தகுதியை அடையும் வரை ஒவ்வொரு ஆன்மாவும் தகுந்த நன்முயற்சியில் ஈடுபடுவது ஆன்மாவின் தலையாயப் பணியாம்.

சன்மார்க்க வாழ்வு

சன்மார்க்கம் என்றாலே அனைவரும் எதிர்பார்ப்பது மரணமில்லாப் பெருவாழ்வு ஆகும். வள்ளலாருக்குப் பிறகு மரணமில்லாப் பெருவாழ்வு யாரும் பெறவில்லை என்பதால் மரணமில்லாப் பெருவாழ்வைக் குறை கூறுபவர்கள் ஏராளம், ஆனால் வள்ளலார் கூறிய பாதையில் எந்த அளவிற்கு ஒவ்வொருவரும் முன்னேறியிருக்கிறோம், அவர் கூறிய ஒழுக்கநெறிகளை எவ்வாறு கடைப்பிடிக்கிறோம் என்பதை அனைவரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தல் நலம் பயப்பதாம்.

சன்மார்க்க வாழ்வில் ஒருவர் முழுமையாக வாழ்ந்தால் அவர் யோகத்தால் கிடைக்கக் கூடிய அனைத்துப் பலன்களையும் பெறுவார், தியானம், தவம் கைக்கூடும், அன்பு, நல்லொழுக்கத்தால் எல்லா உயிர்களும் அவரைத் தொழும் இது உண்மை.

வள்ளலாருக்குப் பிறகு மரணமில்லாப் பெருவாழ்வு

வள்ளலார் கூறிய மரணமில்லாப் பெருவாழ்வில் அதிசூட்சும ரகசியம் அடங்கி இருக்கிறது. மரணமில்லாப் பெருவாழ்வு என்பது இன்றைக்கு வார்த்தையில் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு மாபெரும்வர பிரசாதமாகும். ஆனால் ஒரு பக்குவம் இல்லாத ஒரு மனிதனிடம் ஒரு அணுகுண்டு கொடுத்தால் என்ன நடக்குமோ, அது மாதிரி மரணமில்லாப் பெருவாழ்வு/ சாகாவரம் பக்குவமில்லா ஆன்மாவிடம் வழங்கினால் உலக நன்மை ஏற்படாது.

உதாரணத்திற்குக் கணினியையும் அலைப்பேசியையும் எடுத்துக்கொள்வோம். கணினியும், அலைப்பேசியும் ஒரு பக்கத்தில் நல்ல விதமானக் கருத்துகளையும், கல்வியியையும் கொடுத்து வருகின்றன. அதே சமயம் இத்தகையச் சாதனங்களின் மறுப்பக்கத்தில் பயங்கரவாதக் கருத்துகள் மற்றும் அதைச் சார்ந்தப் பரிமாற்றங்கள், கொலை, கொள்ளை மற்றும் சமூக சீரழிவிற்குக் காரணமாக விளங்கக்கூடிய அனைத்து செயல்களும் நடந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சாதனங்களால் இத்தகையச் சமுதாயக் கேடுகளை விளைவிக்க முடியுமென்றால் சாகாவரம் பெற்ற தகுதியற்ற ஆன்மாக்களால் எத்தகைய நிலை உருவாகும்?

ஆகவே தன்னலம் காணாத பேரன்பு எவரிடத்தில் இருக்கிறதோ அவரே மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்குத் தகுதியுடையவராகிறார். தன்னலம் காணாத அன்பு தான் தனிப்பெருங்கருணை. தனிப்பெருங்கருணை கிட்டும் வரை எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் அதுவரை ஆன்மாக்கள் இப்புவியுலகில் பிறப்பு, இறப்பு வலையில் சிக்கிக்கொள்ளத் தான் வேண்டும்.

சாதனம்

தியானம் மற்றும் தவம் இரண்டும் சாதனங்களே, ஆனாலும் இத்தகையச் சாதனத்தை பயன்படுத்துவதற்கு முன் அன்பு என்கிற சாதனத்தையும் நாம் நடை முறை வாழ்வில் , உலகியல் வாழ்வில் கடைப் பிடித்தல் வேண்டும். தன்னைப் பெற்ற பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் என்று அனைவரிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும், இவர்களிடம் இரக்கம் காட்டாமல் இறைவனிடமிருந்து இரக்கத்தைப் பெற முடியாது.

தாடி வைத்து, ஊருக்கு உபதேசம் செய்து, அசாதாரண சொகுசு வாழ்க்கையில் வாழும் சாமியார்களை விட தன்னை வருவிப்பதற்கு காரணமான இறைவனையும், தாய், தந்தையரையும் போற்றி வணங்கலாம்.

C ஒரு உண்மையான குரு எப்படி இருக்க வேண்டும் என்பதை திருமூலர் முதல் வள்ளலார் வரை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள், எனவே குருவிடம் ஆயிரமாயிரம் பணம் கொடுத்துத் தீட்சை வாங்குவதை விட தன்னைப் பெற்ற தாய், தந்தையரை வணங்கி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யுங்கள்.

C மனமுருகிப் பிரார்த்தனை செய்யும் ஆன்மாவிற்குப் பிரபஞ்சத் தாயானவள் உண்மையான குருவை அடையாளம் காட்டுகிறாள்.

C ஒரு முறை வள்ளல் பெருமானார் காலில் விழுந்து ஒரு அன்பர் ஆசிர்வாதம் வாங்க எண்ணினார், மறுகணம் வள்ளல் பெருமானார் அவர் காலில் விழுந்து வணங்கினார். இந்த ஒரு செய்தியே போதும் வள்ளலார் எவ்வுயிரையும் எவ்வாறாகப் பாவித்தார் என்று, ஆனால் இன்றைக்கு எத்தனை எத்தனையோ சாமியார்கள் காலில் ஆயிரமாயிரம் இளைஞர்கள், கன்னிப்பெண்கள் மற்றும் முதியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். சிந்தித்துப் பாருங்கள்...... உண்மை குரு எப்படியிருப்பார் என்று.....

C உலகத்திற்கு ஒரு வேதாந்தம், தங்களுடைய வாழ்க்கைக்கு ஒரு சித்தாந்தம் என்று வைத்துக் கொள்ளும் சாமியார்களே இன்றைய உலகில் அதிகம். உலகத்தில் இதுவரை தோன்றிய/ வருவிக்கவுற்ற அனைத்து சித்த புருஷர்களும் போதித்தது அன்பு என்கிற சாதனத்தை மட்டுமே.

C அன்பு என்கிற சாதனத்தைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் உங்களுக்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் இருக்கும் இடமே தெய்வீக இடம்.

C உலகம் தோன்றிய காலத்திலிருந்து, இன்றைய நாள் வரைக்கும் அன்பின் பரிணாம வளர்ச்சியில் தான் உலகம் தோன்றி, விரிந்து, தன்னுள் அடங்கி, வியாபித்து எல்லா தொழில்களையும் செய்துக்கொண்டிருக்கிறது. எனவே அன்பெனும் அணுவை உடைத்து அதன் வாயிலாக எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

C எல்லா அண்டங்களையும், எல்லா உயிர்களையும் தோற்றிவித்து பக்குவம் வருவித்து அதனதன் வாயிலாக ஐப்பெரும் தொழில்களையும் செய்து வரும் ஆண்டவரை ஒரு சிலபயிற்சிகள் மூலம் காணலாம் என்கிற எண்ணத்தை விட்டொழியுங்கள்.

C போலியான வேதாந்த, சித்தாந்த கருத்துகளுக்கு அடிமை ஆகாதீர்கள். உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள்/ இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தியான மையம் வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் போலிச் சாமியார்களை நம்பாதீர்கள்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.

பொருள் : அறியாமையை அறிவினால் போக்கும் குருவினைக் கொள்ள மாட்டார்.அறியாமையை நீக்காத குருவினைக் கொள்வர். அது குருடனும் குருடனும் சேர்ந்துகுருட்டுத் தனமாக ஆடி இரு குருடர்களும் அறியாமையால் குழியில் விழுவதுபோலாம். ஞானமில்லாத குரு ஞானத்தை உபதேசிப்பது ஒரு குருடன் மற்றொருகுருடனுக்கு வழிகாட்டுவது போலாம். இருவரும் கெடுவர்.

C பணத்திற்காக எல்லா யோக முத்திரையையெல்லாம் வியாபாரமாக்கி பணம் கண்டு உங்களிடம் எந்த முத்திரையை விற்கலாம் என்பதே போலிச் சாமியார்களின் கணக்கு.

C நீங்கள் அனைவரிடமும் அன்பாக, பண்பாக நடந்துக்கொண்டால் போதும். உங்களிடம் இருக்கும் அனைத்து கோளாறுகளும் மறைந்துவிடும். ‘மழித்தலும், நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்’ (திருக்குறள்) என்பதே சத்திய வாக்கு.

திருமந்திரத்தில்

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலால்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

-திருமந்திரம்

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களுக்கு உட்பட்ட உலகங்கள் அனைத்திற்கும்அப்பாற்பட்ட சிவன், இவ்வுலகத்தில் தென்நாடுடைய சிவனேயாய்த் திகழ்கின்றனன்.அவன் நல்லாராகிய அன்பர்களின் உள்ளத்து மிக்க அருள் செய்தல் போல்ஏனையார்க்கும் செய்தற் பொருட்டுப் புறத்தே, தம் முதல் குருவுமாய்த் தோன்றிஅருள்வன். அதனால் எல்லாரையும் இப்பிறப்பு ஒன்றிலேயே உய்யக் கொண்டருள்வன்.அதனால் புகழமைந்த நற்குரு சுத்த சிவமே.

தியானமும் தவமும்

தியானம் மற்றும் தவம் சன்மார்க்க வாழ்விற்கு மிகவும் அவசியம். தியானத்தால் உள்ளொளி ஓங்கும், உயிரொளி விளங்கும், மெய்யொளி அனுபவம் ஏற்படும். மெய்யொளியும், உயிரொளியும் கலந்து நானே நீ, நீயே நான் என்கிற நிலை ஏற்படும். மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி தவத்தில் ஈடுபடும் பொழுது மெய்யொளி அனுபவத்தால் உடலெல்லாம் அமிர்தம் பொங்கி வழிந்திடும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் உடலில் இருக்கும் அனைத்து அணுக்களும் அமிர்தத்தால் வேதிக்கப்படும்.

தன்னையே எனக்குத் தந்தருளொளியால்

என்னை வேதித்த என் தனி அன்பே!

- திருவருட்பா அகவல்

திருமூலர் இதனை:

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

பொருள் : முன்னிலையில் அமைந்த குரு மௌன ஆனந்தமாகிய பேரின்பத்தில் எனதுபசுகரங்களை அழித்து என்னிடம் அகண்ட அறிவாகிய சிவத்தைப் பதிப்பித்து என்னைநான் அறியாமல் செய்து, வெப்பமற்ற சந்திர மண்டல ஒளியில் மனம் வாக்கு காயம்ஆகிய மூன்றையும் கைக்கொண்டு அவற்றால் அடைந்த பெருமைகளைஅழித்துத்திருவடிகளைச் சூட்டி என்னிடத்தில் நிலை பெற்றனன்.

முக்தியும் சித்தியும்

புடையுறு சித்தியின் பொருட்டேமுத்தியை
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்

தியானமும் தவமும் முக்தியையும் சித்தியையும் தரவல்லது. சித்தியை பெறுவதற்கு முன் முத்தியைப் பெற வேண்டும். அன்பு என்கிற அணுவை உடைத்து எவ்வுயிரையும் தன்னுயிராகப் பாவித்து, தியானத்தில் ஈடுபட முக்தி கைக்கூடும். முக்தியின் வாயிலாக மட்டுமே சித்தியைப் பெற முடியும். எனவே தியானத்தின் மூலம் முதலில் முக்தியைத் தேடுவதற்கு முயல்வோம். பிறகு தவத்தின் வாயிலாகச் சித்தியைப் பெறலாம்/பெறுவோம்.

கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணியதவம் பலித் ததுவே

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

******************

தகவல் உதவி:

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை

 

7 Comments
murthy poongundran
ஆன்மநேய ஒருமைப்பாடும் அன்புள்ளமும் கொண்ட அருமை சான்றோர்களே, காரைக்காலை சேர்ந்து தீவிர வள்ளலார் அன்பர் நம் குமேரேசன் உத்திரகாண்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போய்விட்டார், இன்று வரை குடும்பத்தாருக்கு யாதொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை,,,,,,,அன்பர்களே நண்பர்களே அவர் யாதொரு குறைவுமின்றி நம் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் நலமோடு வீடு திரும்ப வேண்டும் என்று நாம் அனைவரும் அவருக்காக வேண்டிக்கொள்வோமாக.....................
Sunday, July 7, 2013 at 10:47 am by murthy poongundran
Daeiou  Daeiou.
Thiru Kumaresan, who worked as Asst.Professor in a College in Karaikal State is a very good follower of the principles of St.Vallalar.

He embraced Sanmargam .. some 5 years ago. Active participant in all the functions held at Vadalur as well as in Mettukupam.

So also he is very much interested to spread the principles in the North India also. He got permission to gave a speech in the University level function proposed in northern State. and proceeded to the area near flood affected area. Unfortunately, he was stranded some where else in the flood affected area. On seeing the heavy downpour in the area he visited, he contacted his family (near Puducherry_) on 16.6.2013.and explained about it.

Afterwards, no information has been received from him, till date. This news was flashed in all the newspapers in Puducherry State as well as in Tamil Nadu State. His whereabouts are not known. Let us all pray to Almighty for his return, early.

Daeiou Team, Madurai.
Tuesday, July 9, 2013 at 16:51 pm by Daeiou Daeiou.
Durai Sathanan
I have no fear! Because, he is so safe as we are now by His Grace! All possible, Exalt Him Only! Arut Perum Jyothi
Wednesday, July 10, 2013 at 00:15 am by Durai Sathanan
om prakash
with the grace of almighty!!! i pray for his safe return!!!
ArutPerumJyothi!! ArutPerumJyothi!!
Thaniperumkarunai!! ArutPerumJyothi!!
Wednesday, July 10, 2013 at 07:27 am by om prakash
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
ஐயா நலமாக வந்து விட்டாரா?
Friday, July 12, 2013 at 08:06 am by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
Muthukumaaraswamy Balasubramanian
யாராவது பதில் சொல்லுங்களேன்.தொலை பேசியில்கூடத் தொடர்பு கொள்ள முடியவில்லை.காரைக்கால் சங்கமாவது பதில் தரலாம்.
Wednesday, September 4, 2013 at 16:43 pm by Muthukumaaraswamy Balasubramanian
Daeiou  Daeiou.
On 4.8.2013, the Karaikal Sanmarga Sanga Member Thiru Gunasekaran came to Ariyankuppam function in Pondy State. When enquired, he also said that .. for the past few months, Thiru Kumaresan has not attended the monthly meetings conducted at Karaikal. Let us pray to Almighty for his early return.
Wednesday, September 4, 2013 at 17:11 pm by Daeiou Daeiou.