Vallalar Universal Mission Trust   ramnad......
வஞ்சமே பொருளென மதித்து நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.
ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
ஊர்தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
வஞ்சமே பொருளென மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
 
ஓடாது மாயையை நாடாது நன்னெறி
ஊடா திருஎன்றீர் வாரீர்
வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்

ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
யூடத்தைக் காட்டினீர் வாரீர்
வேடத்தைப் பூட்டினீர் வாரீர். வாரீர்