மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
Write a comment