திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் மூன்றாம் ஆண்டு
மகா குருபூஜை நிகழ்ச்சித் தொகுப்பு.
இடம் – அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயம், பொன்னகரம், திண்டுக்கல்.
4.4.2009 சனிக்கிழமை (மாலை 6.30 மணி)
தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் மூன்றாம் ஆண்டு மகா குருபூஜை நிகழ்ச்சிகள் 5.4.2009 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை எனக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அதற்கு முதலாம் நாளான 4.4.2009 சனிக்கிழமை அன்று மாலை சுமார் 6.30 மணி அளவில், கோயம்புத்தூர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத் தலைவர் திரு ராம்தாஸ் மற்றும் அவருடன் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் தயா சன்மார்க்க அன்பர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு, திருவருட்பா இசைக் கச்சேரியினை, பொன்னகரத்தில் நிகழ்த்தினர்.
கடந்த ஆண்டும், சுவாமிகளின் 2ஆம் ஆண்டு குருபூஜை நாளுக்கு முன் நாளில் அந்நிறுவனத்தின் அன்பர்களில் பெரும்பாலோர், இங்கு வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சன்னதியின் முன்னும், சுவாமி சரவணானந்தா அவர்களின் நினைவாகவும் இசை விழாவே நடத்தியது, மிகவும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் சன்மார்க்க சீலர்கள் அனைவரும் அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தது, மிகவும் அருமையான ஒரு நிகழ்வு ஆகும்.
இந்த ஆண்டிலும், அதே பணியினை, தயாவொளி இயக்கத்தைச் சேர்ந்த அன்பர்கள், தமது கடமையாகவும், பிற அன்பர்களுக்கு, திரு அருட்பாவின் மேன்மையும், அதனை இசை வடிவில் உளமுருக எவ்வகையில் பாடலாம் என்றதை உணர்த்தும் வகையிலும் அவர்கள் பாடினர்.
4.4.2009 அன்று கலந்து கொண்டவர்கள் பெயர்கள் முதலிய விபரம்.
திரு ராம்தாஸ், ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர்.
திருமதி ஸ்வர்ண லதா, நிறுவனரின் மனைவியார்.
திரு சிவக்குமார், சரவணம்பட்டி.
திருமதி தமிழரசி, அவரது மனைவியார், சரவணம்பட்டி.
திரு பிரபாகரன், மசக்காளிபாளையம், கோயம்புத்தூர்
செல்வி மீனா, கோயம்பத்தூர்.
திரு ராமச்சந்திரன், கோயம்புத்தூர்.
திரு அன்பு, கோயம்புத்தூர் (மிருதங்க வித்வான்)
திரு சாம்ராட் (கீ போர்டு வாசிப்பவர்)
ரமேஷ், கோயம்பத்தூர்
ஜெயசீலன், கோயம்புத்தூர்.
இவர்கள் அனைவரும் திருவருட்பாக்களை மிகுந்த ஆன்மக் குழைவுடனும், அருமையான இசையுடனும் மேற்காணும் சந்நதியில் வாசித்தனர்.
அதனைக் காண, திண்டுக்கல் ஜூவல்லரி நிறுவனர், திரு மேடா நித்தியானந்தம், பாளையங்கோட்டை டாக்டர் லக்ஷ்மையா குடும்பத்தினர் மற்றும் மதுரை நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம், திண்டுக்கல் விசுவநாதன் மற்றும் பல சன்மார்க்க அன்பர்கள் வருகை புரிந்திருந்தனர்.
திருவருட்பாவினை, தமது நிறுவனத்தின் அன்பர்கள் அனைவருடனும் வந்து அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயத்தின் முன் பாடிப் பரவசப்படுத்தியமைக்கு, அந் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அன்பர்கள் அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
Write a comment