அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளும் மனிதனின் எண்ண அலைகளும் – ஓர் ஆய்வு
எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்தவைகள் கருந்துளைகள் (Black hole). பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த விநோதப் பொருள் பற்றிய மர்மங்களை விஞ்ஞானிகளாலும் முழுமையாக அறியமுடிவதில்லை. மிகப்பெரிய நட்சத்திரங்கள் திடீரென தனித்தனியாகச் சுருங்கியதன் விளைவாகக் கருந்துளைகள் உருவாகலாம் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
மேலும் இவற்றுள் காணப்படும் நிறையீர்ப்புச் சக்தியின் காரணமாக ஒளிக்கதிர்கள் வெளியேற்றப்படுவதில்லையாம், எனவே நட்சத்திரங்களின் மேற்பரப்பைக் காட்டிலும் கருந்துளைக்குள் என்ன நடக்கிறது என்பது இன்றும் புரியாதப் புதிராகவே உள்ளது.
விஞ்ஞானம் இதனைப் பற்றிக் கூறும் பொழுது இந்தக் கருந்துளைகள் மிகவும் வழ வழப்பானப் பொருளாக இருக்க வேண்டும் என்றும் இவற்றின் நிறையீர்ப்பு சக்தியின் காரணமாக எந்த கதிர்வீச்சும் வெளிவர இயலாமல் போகலாம் என்றும் கருதுகிறது. இந்தக் கருந்துளைகளிடம் சிக்கிக் கொண்ட பொருட்கள் எதுவும் வெளியே வர இயலாது. மேலும் இவற்றைப் பிளக்கவோ, அழிக்கவோ, சுருக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது.
விண்மீன்களோடு ஜோடியாகச் சேர்ந்து சுற்றி வரும் இக்கருந்துளைகள் நட்சத்திரங்களின் வாயுக்களைக் கவர்ந்து இழுத்து அந்த நட்சத்திரங்களையே விழுங்கி விடுகின்றன. அவ்வாறு விழுங்கும்போது இந்தக் கருந்துளைகள் வெப்பமடைந்து X கதிர்கள் வெளியிடப்படுகின்றனவாம். இந்த வாயுக்களின் சத்தங்களைக் கொண்டுதான் கருந்துளைகள் இருப்பதையும் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
செயற்கைத் துணைக்கோள்களில் அனுப்பப் பட்ட X கதிர் தொலைநோக்கி 8000 ஒளியாண்டு தொலைவில் செறிவுமிக்க X கதிர் வெளியாயிருப்பதைக் கண்டு இது கருந்துளைகளாக இருக்கலாம் என்று உறுதி செய்துள்ளது. சைக்எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட இந்த கருந்துளை சூரியனை விட 3 மடங்கு பெரியதாக உள்ளதாம். HDE -226868 என்ற நட்சத்திரத்துடன் இந்தக் கருந்துளை ஜோடி சேர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதுவரை பிரபஞ்சத்தில் 10000- ல் 1 பங்கு பகுதியை இந்தக் கருந்துளைகள் விழுங்கி விட்டனவாம். இந்நிலை தொடர்ந்து நடைப்பெற்றால் ஒரு நாள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களும் கருந்துளைகளால் அழிக்கப்பட்டுவிடும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
கருந்துளைகள் புரியாதப் புதிராக இருப்பினும் நமது மெய்ஞ்ஞானம் இதனை இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான அழித்தலாகவே கருதுகிறது. இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து அண்டக்கோடிகளும் அவற்றில் இருக்கும் அனைத்து உயிர்களும் இறைவனால் மட்டுமே படைப்பிக்கப்பட்டிருப்பதாக நமது மெய்ஞ்ஞானம் கூறுகிறது.
மனிதனின் பரிணாம வளர்ச்சியின் கோட்பாடும் உண்மை இல்லை என்று (CHAD) எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு திட்டவட்டமாகக் கூறுகிறது. இது டார்வின் கொள்கைகளைப் பின்பற்றும் விஞ்ஞானிகளின் கருத்துகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' என்ற பரிணாம வளர்ச்சியை இது முற்றிலும் மறுக்கிறது. நாம் வாழும் பிரபஞ்சத்தையும், இதிலுள்ள அனைத்து உயிர்களையும் இறைவன் ஒருவனே படைத்தான் என்பதை விஞ்ஞானிகள் மறுத்தாலும், நம்முடைய சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் ஆன்றோர் பெருமக்கள் அனைவரும் இந்தப் பிரபஞ்சம் இறைவனால் மட்டுமே படைக்கப்பட்டது என்பதை மிகவும் உறுதியாகக் கூறுகிறார்கள்.
வள்ளல் பெருமானாரும் இதனை:
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக் கலகநிலை அறியாத காட்சி யாகிக் கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி இலகுசிதா காசமதாய்ப் பரமா காச இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி அலகில்அறி வானந்த மாகிச் சச்சி தானந்த மயமாகி அமர்ந்த தேவே
ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையேஉன்ன முடியா அவற்றின்ஓராயிரங்கோடி மால் அண்டம் அரன் அண்டம்உற்ற கோடா கோடியேதிருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்ணிறந்ததிகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர் தம்சீரண்டம் என் புகலுவேன்உறுவும் இவ்வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்உறுசிறு அணுக்களாகஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்ஒரு பெருங்கருணை அரசேமருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியாவரந்தந்த மெய்த்தந்தையேமணிமன்றின் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம்வல்ல நடராஜபதியே!
அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே
உலகு பல் கோடி கோடிகள் இடங்கொள்உவப்பிலா அண்டத்தின் பகுதிஅலகு காண் பரிய பெரிய கூட்டத்தஅவையெலாம் புறத்திறைச் சார்பில்விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்றிருந்தென விருந்தன....
இப்படி உருவான பிரபஞ்சத்தில் காணப்படும் மின்காந்த அலைகளுக்கும் மனிதனின் எண்ண அலைகளுக்கும் சம்பந்தம் உண்டா? கிரகங்களின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களுக்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டா?
இவ்வித வினாக்களுக்கு ஜோதிடத்தில் பதில் கிடைக்குமா?
ஜோதிடம் என்றால் என்ன?
தொடரும்..........., அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பாடல்கள் உதவி:வள்ளலார் இணைய தளம்
பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளும் மனிதனின் எண்ண அலைகளும் – ஓர் ஆய்வு
எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்தவைகள் கருந்துளைகள் (Black hole). பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த விநோதப் பொருள் பற்றிய மர்மங்களை விஞ்ஞானிகளாலும் முழுமையாக அறியமுடிவதில்லை. மிகப்பெரிய நட்சத்திரங்கள் திடீரென தனித்தனியாகச் சுருங்கியதன் விளைவாகக் கருந்துளைகள் உருவாகலாம் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
மேலும் இவற்றுள் காணப்படும் நிறையீர்ப்புச் சக்தியின் காரணமாக ஒளிக்கதிர்கள் வெளியேற்றப்படுவதில்லையாம், எனவே நட்சத்திரங்களின் மேற்பரப்பைக் காட்டிலும் கருந்துளைக்குள் என்ன நடக்கிறது என்பது இன்றும் புரியாதப் புதிராகவே உள்ளது.
விஞ்ஞானம் இதனைப் பற்றிக் கூறும் பொழுது இந்தக் கருந்துளைகள் மிகவும் வழ வழப்பானப் பொருளாக இருக்க வேண்டும் என்றும் இவற்றின் நிறையீர்ப்பு சக்தியின் காரணமாக எந்த கதிர்வீச்சும் வெளிவர இயலாமல் போகலாம் என்றும் கருதுகிறது. இந்தக் கருந்துளைகளிடம் சிக்கிக் கொண்ட பொருட்கள் எதுவும் வெளியே வர இயலாது. மேலும் இவற்றைப் பிளக்கவோ, அழிக்கவோ, சுருக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது.
விண்மீன்களோடு ஜோடியாகச் சேர்ந்து சுற்றி வரும் இக்கருந்துளைகள் நட்சத்திரங்களின் வாயுக்களைக் கவர்ந்து இழுத்து அந்த நட்சத்திரங்களையே விழுங்கி விடுகின்றன. அவ்வாறு விழுங்கும்போது இந்தக் கருந்துளைகள் வெப்பமடைந்து X கதிர்கள் வெளியிடப்படுகின்றனவாம். இந்த வாயுக்களின் சத்தங்களைக் கொண்டுதான் கருந்துளைகள் இருப்பதையும் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
செயற்கைத் துணைக்கோள்களில் அனுப்பப் பட்ட X கதிர் தொலைநோக்கி 8000 ஒளியாண்டு தொலைவில் செறிவுமிக்க X கதிர் வெளியாயிருப்பதைக் கண்டு இது கருந்துளைகளாக இருக்கலாம் என்று உறுதி செய்துள்ளது. சைக்எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட இந்த கருந்துளை சூரியனை விட 3 மடங்கு பெரியதாக உள்ளதாம். HDE -226868 என்ற நட்சத்திரத்துடன் இந்தக் கருந்துளை ஜோடி சேர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதுவரை பிரபஞ்சத்தில் 10000- ல் 1 பங்கு பகுதியை இந்தக் கருந்துளைகள் விழுங்கி விட்டனவாம். இந்நிலை தொடர்ந்து நடைப்பெற்றால் ஒரு நாள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களும் கருந்துளைகளால் அழிக்கப்பட்டுவிடும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
கருந்துளைகள் புரியாதப் புதிராக இருப்பினும் நமது மெய்ஞ்ஞானம் இதனை இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான அழித்தலாகவே கருதுகிறது. இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து அண்டக்கோடிகளும் அவற்றில் இருக்கும் அனைத்து உயிர்களும் இறைவனால் மட்டுமே படைப்பிக்கப்பட்டிருப்பதாக நமது மெய்ஞ்ஞானம் கூறுகிறது.
மனிதனின் பரிணாம வளர்ச்சியின் கோட்பாடும் உண்மை இல்லை என்று (CHAD) எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு திட்டவட்டமாகக் கூறுகிறது. இது டார்வின் கொள்கைகளைப் பின்பற்றும் விஞ்ஞானிகளின் கருத்துகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' என்ற பரிணாம வளர்ச்சியை இது முற்றிலும் மறுக்கிறது. நாம் வாழும் பிரபஞ்சத்தையும், இதிலுள்ள அனைத்து உயிர்களையும் இறைவன் ஒருவனே படைத்தான் என்பதை விஞ்ஞானிகள் மறுத்தாலும், நம்முடைய சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் ஆன்றோர் பெருமக்கள் அனைவரும் இந்தப் பிரபஞ்சம் இறைவனால் மட்டுமே படைக்கப்பட்டது என்பதை மிகவும் உறுதியாகக் கூறுகிறார்கள்.
வள்ளல் பெருமானாரும் இதனை:
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக் கலகநிலை அறியாத காட்சி யாகிக் கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி இலகுசிதா காசமதாய்ப் பரமா காச இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி அலகில்அறி வானந்த மாகிச் சச்சி தானந்த மயமாகி அமர்ந்த தேவே
ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையேஉன்ன முடியா அவற்றின்ஓராயிரங்கோடி மால் அண்டம் அரன் அண்டம்உற்ற கோடா கோடியேதிருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்ணிறந்ததிகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர் தம்சீரண்டம் என் புகலுவேன்உறுவும் இவ்வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்உறுசிறு அணுக்களாகஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்ஒரு பெருங்கருணை அரசேமருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியாவரந்தந்த மெய்த்தந்தையேமணிமன்றின் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம்வல்ல நடராஜபதியே!
அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே
உலகு பல் கோடி கோடிகள் இடங்கொள்உவப்பிலா அண்டத்தின் பகுதிஅலகு காண் பரிய பெரிய கூட்டத்தஅவையெலாம் புறத்திறைச் சார்பில்விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்றிருந்தென விருந்தன....
-திருவருட்பா
இப்படி உருவான பிரபஞ்சத்தில் காணப்படும் மின்காந்த அலைகளுக்கும் மனிதனின் எண்ண அலைகளுக்கும் சம்பந்தம் உண்டா? கிரகங்களின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களுக்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டா?
இவ்வித வினாக்களுக்கு ஜோதிடத்தில் பதில் கிடைக்குமா?
ஜோதிடம் என்றால் என்ன?
தொடரும்..........., அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பாடல்கள் உதவி:வள்ளலார் இணைய தளம்
Write a comment