அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" - அருட்பெருஞ்ஜோதி அகவல்
“சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி” - அருட்பெருஞ்ஜோதி அகவல்
“சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி” - அருட்பெருஞ்ஜோதி அகவல்
“சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்
மேலேயுள்ள, 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' அடிகளில் இருவேறு மதங்களை, நம் வள்ளற்பெருமான் தெளிவுபடுத்துகிறார்கள்.
சுத்தம் என்றால் என்ன? சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன? - என்று அருளால் அறிந்து அனுபவம் ஆகும்போது, மேற்படி மதங்கள் குறித்து உண்மை வெட்ட வெளிச்சமாகும். மருளில் அகப்பட்டால் தெருள் காரியப்படாது.
தற்போது அறியவேண்டியது யாதெனின், சுத்தம் என்பது ஒன்றும் அல்லாதது, அதாவது நிர்மலம். ‘சுத்தம்’ - எனும் சொல் சன்மார்க்கம் எனும் சொல்லுக்குப் பூர்வமாக வந்ததால், சுத்த சன்மார்க்கம் மேற்குறித்த சமய-மதானுபவங்களைக் கடந்தது என்று உண்மையாக அறிக. அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தமாகும். இதன் முக்கிய லட்சியம், சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய “சுத்த சிவ துரியாதீத நிலை” பெறில் விளங்கும்.
ஆகலில்,
"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" - என்று, அருட்பெருஞ்ஜோதி அகவலில் காட்டப்பட்டுள்ள மதம் “சுத்த மதமாகும்.” இஃது நிர்மலமான “அருள்மார்க்கமாகும்” என்று அறிக.
அடுத்து,
“சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி"
"சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி"
"சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி”
- இதில் காட்டப் பட்டுள்ள “சாதியும், சமயமும், மதமும்” -உலக வழக்கிலுள்ள மலமுடைய “ சாதி, சமய மதங்களைக் குறிக்கும்.”
திருஅருட்பா ஆறாம் திருமறையில் காட்டப்பட்டுள்ள தன்சாதி, எம்மதம், எம்குலம், எம்மினம் என்பவை, 96 - தத்துவங்களையும் வெற்றிகண்ட, சுத்த அருளாளர்களாகிய சுத்த சன்மார்க்கப் புண்ணியர்களின் சாதி ,மதம், குலம், இனம் - இவற்றைக் குறிக்கும்.
ஆகவே,
“சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி” - என்று படிக்கும் போது,
“ (உலக) சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி” - என்றுணர்க.
“சுத்த மதமாகிய (அருள் மதமாகிய)” சுத்தசன்மார்க்கத்திற்கு, உலகிலுள்ள சமயமதங்கள்/மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
மேலும், தெளிவான நல்ல விளக்கத்தை "திருஅருட்பா உரைநடைப்பகுதி" பக்கம் 404-ல் காண்க.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி த
னிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!
நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" - அருட்பெருஞ்ஜோதி அகவல்
“சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி” - அருட்பெருஞ்ஜோதி அகவல்
“சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி” - அருட்பெருஞ்ஜோதி அகவல்
“சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்
மேலேயுள்ள, 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' அடிகளில் இருவேறு மதங்களை, நம் வள்ளற்பெருமான் தெளிவுபடுத்துகிறார்கள்.
சுத்தம் என்றால் என்ன? சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன? - என்று அருளால் அறிந்து அனுபவம் ஆகும்போது, மேற்படி மதங்கள் குறித்து உண்மை வெட்ட வெளிச்சமாகும். மருளில் அகப்பட்டால் தெருள் காரியப்படாது.
தற்போது அறியவேண்டியது யாதெனின், சுத்தம் என்பது ஒன்றும் அல்லாதது, அதாவது நிர்மலம். ‘சுத்தம்’ - எனும் சொல் சன்மார்க்கம் எனும் சொல்லுக்குப் பூர்வமாக வந்ததால், சுத்த சன்மார்க்கம் மேற்குறித்த சமய-மதானுபவங்களைக் கடந்தது என்று உண்மையாக அறிக. அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தமாகும். இதன் முக்கிய லட்சியம், சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய “சுத்த சிவ துரியாதீத நிலை” பெறில் விளங்கும்.
ஆகலில்,
"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" - என்று, அருட்பெருஞ்ஜோதி அகவலில் காட்டப்பட்டுள்ள மதம் “சுத்த மதமாகும்.” இஃது நிர்மலமான “அருள்மார்க்கமாகும்” என்று அறிக.
அடுத்து,
“சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி"
"சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி"
"சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி”
- இதில் காட்டப் பட்டுள்ள “சாதியும், சமயமும், மதமும்” -உலக வழக்கிலுள்ள மலமுடைய “ சாதி, சமய மதங்களைக் குறிக்கும்.”
திருஅருட்பா ஆறாம் திருமறையில் காட்டப்பட்டுள்ள தன்சாதி, எம்மதம், எம்குலம், எம்மினம் என்பவை, 96 - தத்துவங்களையும் வெற்றிகண்ட, சுத்த அருளாளர்களாகிய சுத்த சன்மார்க்கப் புண்ணியர்களின் சாதி ,மதம், குலம், இனம் - இவற்றைக் குறிக்கும்.
ஆகவே,
“சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி” - என்று படிக்கும் போது,
“ (உலக) சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி” - என்றுணர்க.
“சுத்த மதமாகிய (அருள் மதமாகிய)” சுத்தசன்மார்க்கத்திற்கு, உலகிலுள்ள சமயமதங்கள்/மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
மேலும், தெளிவான நல்ல விளக்கத்தை "திருஅருட்பா உரைநடைப்பகுதி" பக்கம் 404-ல் காண்க.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி த
னிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!
நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்
7 Comments
//"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" - என்று, அருட்பெருஞ்ஜோதி அகவலில் காட்டப்பட்டுள்ள மதம் “சுத்த மதமாகும்.” இஃது நிர்மலமான “அருள்மார்க்கமாகும்” என்று அறிக.////
//“சுத்த மதமாகிய (அருள் மதமாகிய)” சுத்தசன்மார்க்கத்திற்கு, மேற்குறித்த அசுத்த உலக சமயமதங்கள்/மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.//
"வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார்" - பேருபதேசம்
எங்கானம் வேலாயுத முதலியார் போல் பொய் கூறி உளறுவது தகுமோ?
2076 தருநெறி எல்லாம்உள் வாங்கும் – சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் – திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
2077 எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் – திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
எங்கானம் "மார்க்கம்" ஒரு "மதம்" ஆகுமோ?
I think Vallal Peruman was very clear when he came up with the name for his teachings/margam. With God’s guidance Vallal Peruman was very very careful not to include the word ‘religion’ to his margam. If Vallal Peruman wanted his margam to be a new religion, he would have explicit named it as ‘Arul Matham (அருள்மதம்)’ or included the word ‘Matham’ to his margam or path.. The fact that he didn’t do that clearly shows that Suddha Sanmargam is not a religion.
சன்மார்க்கம், மதங்கள் கடந்த, கணினி கொண்டு அளக்க இயலா, அருளே வடிவான தனி மார்க்கம் ஆகும்...
சன்மார்க்கம் தனிப்பட்ட மதம் இல்லை...
தவறான பதிவு செய்து, வள்ளல் பெருமானுக்குக் கலக்கத்தையும் , வள்ளல் பெருமான் பெயருக்குக் களங்கத்தையும் உருவாக்க வேண்டாம் அய்யா!!!
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி" - அருட்பெருஞ்ஜோதி அகவல்
Swami Saravananda is interpreting this line as Arutperunjothi manifests in all religions and godheads professed by the multitude (different
lifes).. So I think this lines actually refers to the fact that no
matter whatever God or religions a living being follows, the Godhead/
God that manifests in that religions is actually Arutperunjothi.. If
this is the case, it is not accurate to say that Suddha Sanmargam is
Arul Matham..
The moment one says that Suddha Sanmargam as Arul Matham, it becomes a
separate religion.. And when it becomes as a separate religion it will
be perceived as to be in the same realm as all the other religions
which is not true...
Suddha Sanmargam goes beyond the realm of religions as mentioned by Vallal Perumaan.
அற்புதம் அற்புத மே.
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்...
மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி
மயில்குயில் ஆச்சுத டி.
2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி.
3. **சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.**
4. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி
ஐயரைக் கண்டேன டி.
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
கமெண்ட் என்பது சுருக்கமாக இல்லாதுநீண்ட
சிமெண்ட் சுவர்போல பலர் பதிவிற்குஇங்கே
டிராபிக் தடையாதல் கூடாது என்பதற்காகவே
வெரிபிக் விடையாக எம்தனிபதிவு காண்கவே!
அப்பதிவின் தலைப்பு, “'அருள் மார்க்கம்' - மறுப்பிற்குத் தனிஅஞ்சல்”
நன்றி, வணக்கம், சுபம்.