Vallalar Groups
ஜீவர்கள் இறந்திறந்து வீண் போகாமால் இருக்க வழி

{ContentRefr:2910}

ஜீவர்கள் இறந்த்திறந்து வீண் போகாமால் இருக்க வழி:
இனி , இச் ஜீவர்கள் விரைந்து விரைந்து , இறந்து இறந்து வீண் போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு , உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களை பெற்று நற்செய்கை உடையவராய் , எல்லா சமயங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் , எல்லா மார்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகி விளக்கும் சுத்த சன்மார்க்கத்தை பெற்று , பேரின்பசித்தி பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும்,பெருங் களிப்பையும்,அடைந்த வாழும் பொருட்டு மேற்குறித்த "உண்மைக் கடவுள்" தாமே திருவுளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கம் செய்கிற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருள் சம்மதத்தால் இயற்று வித்து, "இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்" எனும் திரு குறிப்பை வெளிப்படுத்தி , அருட்பெரும் ஜோதியராய் வீற்றுறிகின்றார்.
ஆதலால் , அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்க பெறுவீர்களாயிற், கருதிய வண்ணம் பெற்று களிப்படைவதும் அன்றி , இறந்த்தவர் உயிர் பெற்றுஎழுதல் , முப்பினர் இளமையை பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களை கண்டு பெரும் களிப்பு அடைவீர்கள்