Vallalar Groups
வள்ளலார் காட்டும் "உண்மை கடவுள்" - Part 3

அற்புத பத்திரிகை


  • இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ,
  • இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும் ,
  • இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும் ,
  • எல்லா அண்டங்களையும் ,
  • எல்லா உலகங்களையும் ,
  • எல்லா பதங்களையும் ,
  • எல்லா சத்திகளையும் ,
  • எல்லா சத்தர்களையும் ,
  • எல்லா கலைகளையும் ,
  • எல்லா பொருள்களையும்
  • எல்லா தத்துவங்களையும் ,
  • எல்லா தத்துவிகளையும்,
  • எல்லா உயிர்களையும் ,
  • எல்லா செயல்களையும்,
  • எல்லா இச்சைகளையும்,
  • எல்லா ஞானங்களையும்,
  • எல்லா பயன்களையும்,
  • எல்லா அனுபவங்களையும்,
  • மற்ற எல்லாவற்றையும்

    தமது திருவருட் சத்தியால் (பெரும்கருணை பெரும்தொழில்கள்)
  • தோற்றுவித்தல் ,
  • வாழ்வித்தல் ,
  • குற்றம் நீக்குவித்தல் ,
  • பக்குவம் வருவித்தல்,
  • விளக்கம் செய்வித்தல் ,

    முதலிய பெரும்கருணை பெரும் தொழில்களை
  • இயற்றுவிக்கின்றவர் என்றும் ,
  • எல்லாம் ஆனவர் என்றும் ,
  • ஒன்றும் அல்லாதவர் என்றும் ,
  • சர்வ காருணயர் என்றும் ,
  • சர்வ வல்லபர் என்றும் ,
  • எல்லாம் உடையவராய் தனக்கு ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லா
  • தனிப்பெரும் தலைமை அருட்பெருன்ஜோதியர் என்றும் ,

    சத்திய அறிவால் அறியபடுகின்ற உண்மை கடவுள் ஒருவரே,

    அகம் புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த, சுத்த மெய்-அறிவென்னும்

    பூரண பொது வெளியில், அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.


{ContentRefr:2863}

{ContentRefr:2894}