"கடவுள்நிலை அறிந்து அம்மயம் ஆவது" எவ்வாறு?
நாம் பெரும் புருஷார்த்தம் நான்கு.
அதில் ஒன்று "கடவுள்நிலை அறிந்து அம்மயம் ஆதல்" .
- சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும்,
சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும்,
இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும்,
அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.
- ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள்
கடவுளைக் கண்டவர்களென்றும், கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷ’த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.
2 Comments
ஆண்டுகள்} பாசவைராக்கியம் விஷ்ணு ஆயுசும் (864000 ஆண்டுகள்) ஈஸ்வர பக்தியினால் ருத்ரன் ஆயுசும் (1296000 ஆண்டுகள் ) பிரம்ம ஞானத்தால் என்றும் அழியாத ஸ்வர்ண தேகமும் பெறலாம் என்பது. கடவுள் நிலை என்பது என்றும் அழியாத நிலையே ஆகும்.வள்ளலாரும் என்றும் அழியாத ஞான தேகம் பெற்று இன்றும் தன் உடலோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆதல் என்று புரிந்துகொண்டு நாமும் வள்ளலார் எப்படி இந்நிலை அடைந்தார் என்று அறிந்து அவ்வாறு வாழ்ந்து அவர் பெற்ற பெறுவோமாக.