மெய் ஞானத்தை அடையும் வழி
பகுதி-12
மகாமந்திரமும் தாரகமந்திரமும்
வேதமும் ஆகம விரிவுகளனைத்தும்
ஓத நின்றுலவா தோங்கு மந்திரமே
உடற்பிணி யனைத்தையும் உயிர் பிணி யனைத்தையு
மடர்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே - (அகவல் 1319 - 1322)
ஊக்கமுள்ள மனிதன் கடவுளை உணர்வது எளிது என்பதை தெரிந்து முயற்சியுடன்
சத்விசாரம் செய்தால் தன்னையும் அறிந்து இறைவனையும் அறியலாம். அதற்கு
உறுதுணையாக இருப்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு அருளிய
அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமாகும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்பது மகாமந்திரம் ஆகும்
அங்கிங்கு என்று வரையறுத்து கூறமுடியாத வகையில் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற
நிறைந்திருக்கும் ஆண்டவரின் அருள் சக்தியை ஆன்மாக்களுக்கு அளிக்கும் சாதனமாகவும்,
எந்த மொழியிலும் எந்த வகையிலும் ஒப்பு நோக்க இயலாத வகையில் ஆண்டவரை கூப்பிடும்
பெயராகவும் உள்ள வார்த்தையே அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.
அருட்பெருஞ்ஜோதி என்ற வார்த்தையை பெயராக கொள்ளும்போது பிரபஞ்சம் முழுதும்
உஷ்ண சக்தி மூலமாகத்தான் அனைத்தும் இயங்குகின்றன என்பதைக் கொண்டு காரணப்
பெயராக இந்த வார்த்தை அமைகின்றது.
இந்த உஷ்ண சக்தியானது அருள் சக்தியாக மாறி அருள் அலைகள் வடிவில்
ஆன்மாக்களை அடையச் செய்ய மனிதர்களால் மந்திரங்கள் சாதனமாக பயன்படுத்தபடுகின்றன.
மந்திரங்கள் ஒலி அலைகளால் உருவாக்கப்படுபவை. அந்த அலைகளில் அதிகப்படியான
உயிர் ஒலிகள் உள்ள மந்திரங்கள் சாதனமாக பயன்படுத்தப்படுகின்றன. எந்த அளவு பல்வேறு
உயிர் ஒலிகள் அதிகப்படியாக அமைந்துள்ளதோ அந்த அளவிற்கு மந்திரங்கள் சிறப்பாக
செயல்படும்.
மந்திர அடிப்படையில் பார்த்தால் அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரே வார்த்தையில் ஐந்து
வகையான ஆறு உயிர் ஒலிகள் அடங்கியுள்ளன. பதி மூன்று எழுத்துக்களாக விரிகின்றது.
(தொடரும்)
அடுத்த தொகுப்பு அடுத்த வாரம்
Email : mahamandhirapeedam@yahoo.com
mahamandhirapeedam@gmail.com
jyothimaindhan@gmail.com
Cell: 9942062598,
04172-275071.
Really Good&Beautiful Presentations of Mahamanthiram&TharagaManthiram. Keep it up.
I have Appreciate your Sanmarga Activities.
With Vallalar Loving,
AruljothiSujatha.