Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
உங்கள் கட்டுரைகளும் வள்ளலார் ஸ்பேஷ்-ல் இடம் பெற வேண்டுமா

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

உங்கள் கட்டுரைகளும் வள்ளலார் ஸ்பேஷ்-ல் இடம் பெற வேண்டுமா !

அன்புடையீர்!

எல்லாம் வல்ல ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் அருளாசியால் வள்ளலார் ஸ்பேஷ் இணைய தளம் இன்று உலகளவில் பெரும்பாலான அன்பர்களால் தினமும் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மன், ஃபிரான்ஸ், லண்டன், ரஷ்யா, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவில் வாழும் அன்பர்களுக்கு இந்த இணைய தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

இந்த இணையதளம் நாளுக்கு நாள் பல அன்பர்களால் பார்க்கப்பட்டு பல கருத்துகளை பரிமாற்றம் செய்து வருவதால் , பல அன்பர்கள் தங்களுடைய கட்டுரை மற்றும் அவர்கள் இருக்கும் ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இங்கு வெளியிட விரும்புகிறார்கள், எனவே அவர்களுக்கும் பயன் அளிக்க வேண்டும் என்று இணையதள நிறுவனர் திரு . செந்தில் மருதையப்பன் விரும்புகிறார்.

எனவே வள்ளலார் பற்றிய ஆய்வுக்கட்டுரை, கட்டுரை, செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை வெளியிட விரும்புகிறவர்கள் கீழ் காணும் முகவரியை தொடர்புக்கொண்டு தங்களுடைய படைப்புகளை வெளியிடலாம். கட்டுரைகள் தட்டச்சு செய்யாமல் இருந்தாலும் தட்டச்சு செய்து வெளியிடப்படும்.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

K. குமரேசன்

அருள்ஜோதி சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

2/134, நடுத்தெரு

9, ஆலத்தூர் ( Po)

நிரவி வழி

காரைக்கால்- 609604

+ 91 80567 25314





KUMARESAN KRISHNAMURTHY
அன்புடையீர்
இந்த அறிவிப்பை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி சுத்த சன்மார்க்க செய்திகளை அனைவரும் தெரிந்துக்கொள்வதற்கு வசதியாக அவர்களுடைய படைப்புகளை வெளியிட கூறுங்கள்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சுத்த சன்மார்க்க சங்கங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.வள்ளல் பெருமானாரின் ஞான தேக வெளிப்பாடும் இதன் மூலம் தெரிய வருகிறது.
எனவே நாமும் சுத்த சன்மார்க்கத்திற்காக நம்மால் இயன்ற பணியை செய்வோம். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி
Saturday, August 28, 2010 at 01:58 am by KUMARESAN KRISHNAMURTHY