தயவுஅன்பர்களுக்கு நன்றி
இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தாரால் பராமரிக்கப்படும் சுமார் 80 பேர்களுக்கும் தீபாவளிக்குத் தேவையான புத்தாடைகள்பல ஆண்டுகளாக வழங்கி வரும் இராமநாதபுரத்தைச்சேர்ந்த தயவு அன்பர்கள் திரு.இராமநாதன் அய்யா அவர்கள், மற்றும்திரு கோவிந்தராஜன் அவர்கள் மற்றும் திரு அழகர்சாமி அண்ணன் அவர்களுக்கும், மற்றும் திருமதி வசந்தா அவர்களுக்கும், மேலும் வள்ளலார் இல்ல குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவளித்து தீபாவளிக்கு புத்தாடைகள் பல ஆண்டுகளாக வழங்கி வரும் அருள்மிகு ரெகுநாதபுரம் வல்லபை ஐய்யப்ப அறநிலைய நிறுவனர் தலைவர் திரு மோகன் சாமி அவர்களுக்கும் மற்றும் வல்லபை அய்யப்ப அறநிலைய நிர்வாகிகள்திரு இராஜசேகர், திரு வீரப்பெருமாள், திரு பாபு அவர்களுக்கும் , எங்களது பணிவான நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம்.
இறைவனின் தயவைப்பெற பிற உயிர்களிடம் இரக்கம் காட்டுங்கள்,
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்,
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்கள்,
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.