Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலாரும் திருநீறும்

வள்ளல் பெருமான் வரலாற்றில் யாரேனும் நோய் தீர்க்க வேண்டும் போது திருநீறு தந்து குணமாக்கினார் என்று கூறப்படுகிறது. யாரையும் ஆட்கொண்டு திருநீறு தந்தார் என்றோ பார்க்க வரும் அன்பர்கட்கு திருநீறு தந்தார் என்றோ வரலாற்றுக்குறிப்பில் காணப்படவில்லை. திருநீறு உருத்திராக்கம் வில்வம் கொன்றை இவையெல்லாம் சைவசமயச் சின்னங்களாகும். இவை பெருமானின் கொள்கைக்கு மாறுபாடாகும். ஒரு வெண் சுண்ணத்தை வள்ளலார் மருந்தாகப் பயன்படுத்தியமை தெரிகிறது.