Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.692.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

எழுபதாம் அதிகாரம்.

சுத்த இன்ப நிலை.

2.

நிரம்பிய இன்ப நிலையத் திருந்து

வரவர அன்பை வழங்கு.

692


குறள் விளக்கம்.


இன்ப உணர்வு ஆன்மாவின் கண்ணே பெருகுகின்றது. புறத்தே தயவுச் செயல் வளர வளரத்தான் அகத்தே இவ்வின்பம் பெருகுவதாம்.


தயவில்லாத வாழ்வில் பொறி புலன் நுகர்ச்சியால் துய்க்கின்றஃ அனுபவம் எல்லாம் உண்மை இன்பமல்ல. அது அழிந்து மறைந்து போகக் கூடியதாம், .


ஆதலின், சூழுலகில் மேன்மேலும் அன்பு செய்து கொண்டு ஆன்ம நிலையத்தில், தேகப் பற்றற நிற்க உண்மை இன்பானுபவம் உறலாகின்றது.