Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.687.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தொன்பதாம் அதிகாரம்.

சுத்த சன்மார்க்கம்.


7

அயலறியா தெங்கும் அகமுடையா னாளும்

செயலறி சன்மார்க்கம் தேறு.

687


குறள் விளக்கம்


ஆன்மாவின் அகத்தே என்றும் இருந்து கொண்டு, உலகெல்லாம் ஆண்டு அருள்புரிகின்ற ஒருவர், நமது அகமுடையான் ஆவர். இந்த நம் தலைவர் ஒருவர் தானே சத்தியமாக உள்ளவர்; தயா பெருஞ் ஜோதியாய் அயலறியாது தனித்து நின்று, எங்கும் தானேயாய் இருந்து ஆள்கின்றார்.


நம் தனியொரு ஆன்மாவில் இவ்வொன்றாம் பதி அனுபவம் பெற்று, அயலறியா நின்று, தயானந்தச் செயலோடு விளங்குவதே இச்சன்மார்க்கத்தின் குறிக்கோளாகும்.