Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.672

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தெட்டாம் அதிகாரம்.


உபவாசம்.


2

உண்ணா துறங்கா துரையா திருப்பினுந்

தண்ணார் தயைவருமோ சாற்று.

672


குறள் விளக்கம்


உயிர் விளக்கமும், அருள் விளக்கமும் பெற்று இன்ப வாழ்வில் ஓங்க கடவுளரின் தன்மையான தயவை அடைதல் வேண்டும். உணவு ஏற்காது, துயில் கொள்ளாது, வாய் பேசாது இருப்பதால், தேகேந்திரிய கருவி கரணங்களில் சூடேறி ஓரளவு சுத்தப்படுத்துமேயல்லாது, குளிர்ந்த தயா விளக்கத்தை வளர்க்காது., ஆகவே, உண்ணின்று தயா இன்ப வாழ்வு வாழ வாழ அதுவே சுத்த உபவாசமாய் நித்தியானந்தத்தை நல்கும்