Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.618.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்திரண்டாம் அதிகாரம்.

பணிவு.

8.

உழைப்பா லுயர்ந்தாரு மொத்தாருந் தாழ்ந்து

பழைத்தாருங் கொள்க பணிவு.

618.


குறள் விளக்கம்


தயா நன்முயற்சியினாலே மேம்பட்டவர்கள், தம் போன்றே பிறரும் உழைத்து உயர்வடையச் செய்வதற்கு ஆவன செய்தல் வேண்டும். உட் பெருகும் பணிந்த பண்பாலே உயர்வு தாழ்வு கருதாது யாவர் மீதும் இரக்கத்தோடு அன்பு காட்டல் வேண்டும்.


மற்றவர்களும், தாம் உயர்ந்தோறென்றோ, தாழ்ந்தோறென்றோ, நலிந்து செயலிழந்து விட்டவர் என்றோ எண்ணிப் பெருமையும், சிறுமையும் சோர்வும் கொள்ளாது பணிவோடு, அன்பு நிறைவோடு வாழ்வதுவே நல்லின்பமுறும் வழியாம்.


பழைத்தல் = முதுமையால் நலிதல்.