Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.552.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தாறாம் அதிகாரம்.

கடவுட் காட்சி.

2

கண்ணாலே காணக் கடவுள் உருவுண்டோ

திண்ணா ருருப்போம் சிதைந்து.

552

குறள் விளக்கம்

மிக வன்மையுடைய கல்லும், மலையும், உலோகத் தாதுக்களும் ககனக் கோட்களும் கூட சிதைந்து அழிந்து ஒழிந்து போம். ஆதலின் அவைகளால் ஆக்கப்படும் உருவம் ஒன்றை, நித்தியம் ஆகிய எல்லாம் வல்ல கடவுள் வடிவமாகக் கொள்ளக் கூடுமோ ? கூடாது. ஆகையால் கண்ணாற் காணத்தக்க ஒரு வடிவம் கடவுளுக்கு இல்லை என்ப.

சத்விசாரமில்லாத கீழ்நிலையிலுள்ள மாந்தர்களுக்காக, கடவுளை ஓர் கற்பனை வடிவில் உண்மையறிந்தோர் பாவிக்கச் செய்கின்றனர். பக்குவமடைந்து உண்மைக் கடவுள் அறிவதற்கு இஃது ஓர் உபாயமாகும்.