Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.537.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

ஐம்பத்து நான்காம் அதிகாரம்.

சோதிச் சின்னம்.

7

பருதிமா லான்மா பணிமதி தாணு

கருதுயிர் தேகக் கலை.

537

குறள் விளக்கம்.

சூரியனும், சந்திரனும் உயிரும் உடம்புமாக உள்ளன. சூரியகலை 12ல் இருந்து சந்திரகலை ஒளி பெற்று வளர்ந்து 16 கலை நிறைவதும் தேய்வதுமாகவுள்ளன. இது உயிராகிய, ஆன்மாவினிடத்திருந்து புற உடல் தோன்றி வளர்வதும், தேய்ந்து ஒடுங்குவதும் போன்றதாம்.

பகுதியாகிய ஞாயிறு திருமாலாம் தொருவோணத்தானாகி அகத்தே அறிதுயில் கொண்டு கிடக்க, அவனது 12-வது உடுவாம் திருவாதிரை சிவனுக்கீந்து, அது கொண்டு அச்சிவன் புரியும் புறத்திரு நடனத்தைக் கண்டு கொண்டுள்ளதாம். கடவுள் தத்துவத்துடன் விரவியது நம் தமிழ். ஆதலின், வானச் சோதியின் விளக்கத்தும், மேற்படி கடவுள் தத்துவத்தைக் கற்பித்து ஓதியுள்ளார்கள்.