தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
தெய்வத் திருவுரு.
|
2 |
ஈகையாந் தன்மை யிருகரத்தின் மேற்காட்டும் வாகையேர் பற்கை வழக்கு. |
522 |
குறள் விளக்கம்.
உள்ளத்தில் சுரக்கும் தயவு புறத்தில் செயல்படும்போது ஈகையாகி இரு கரங்களால் உதவ நேருகின்றது. தெய்வத் திருவுருவங்களோ தயவு நிரம்ப உடையவை என்னும் தத்துவ விளக்கத்தின் பொருட்டு, இரண்டிற்கு மேற்பட்ட கரங்களுடன் தயவும் ஆற்றல் மிகுதியும் காட்ட அமைக்கப்பட்டுள்ளனவாம்.
வாகை = வெற்றி, வலிமை, அழகு.
பற்கை = பல கைகள்
வழக்கு = வழக்கம்.
ஈகை விளங்கும் செயலால் தயா வெற்றி உண்டாவதால் தெய்வத் திருவுருவங்களுக்கு வாகை ஏர் பலகைகள் வழங்கப்பட்டுள்ளனவாம்.