Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.479.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.



நாற்பத்தெட்டாம் அதிகாரம்.



ஆன்ம விசாரம்.



9.

அறிவு ஒளிகொண் டவிருதலை நாப்பண்

செறிவுநிலை ஆன்மா தெளி.

479

குறள் விளக்கம்.



நிலையான ஆன்மாவானது பொருந்தி நின்று விளங்குமிடம், அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நம் தலை நடு உள்ளதாகும். இதனை விசாரித்தறிந்து அய்ந்து தெளிவதே ஆன்ம விசாரம் என்ப.



அவிருதல் = அவிர்தல், பிரகாசித்தல்.

அறிவு ஒளி கொண்ட என்பது, அறிவு திகழ்கின்ற அல்லது அறிவுச் சக்தியானது ஒளிந்து கொண்டு (அதாவது) மறைந்து கிடக்கின்ற மூளைத்தலமாம்.