Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.463.

.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.



நாற்பத்தியேழாம் அதிகாரம்.



அருள் விசாரம்.



3

பொருளியாவுக் குள்ளிருக்கும் பொன்றாச்சத் தாகும்

அருளிறைவி சாரம தாம்.

463

குறள் விளக்கம்.

எப்பொருட்கும் உள்ளீடாய் உள்ளது ‘கடவுட் சக்தி. அது என்றும் அழியாது விளங்கும் சத்து என்று உணரப்படுகின்றது. அச்சத்தினையே அருள் இறைவி, அருட்சத்தி அல்லது அருட் சக்தி என்று கூறப்படும்.

இவ்வருட் சக்தியே எல்லாப் பொருள்களின் சாரமாக அறிய வேண்டும். அறிந்து அதனையே சார வேண்டும். சார்ந்து அதுவே ஆக வேண்டும். இவ்வண்ணம் ஆவதே அருள் விசாரமாக நம் சுத்த சன்மார்க்கம் ஓதுகின்றது.