Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.429

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.

தயாநியதி

9

ஆழிபோற் சுற்றும் அருணியதி யோவாது

வாழிநீ வள்ளலருள் வாய்ந்து.

429

குறள் விளக்கம்.

அருள் நியதியானது சதா சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு தெய்வீக சக்கரம் போன்று உள்ளதாம். இதனால்தான் ஆன்மாவுக்கு இடையறாத சீவ தேக போக வாழ்வு சூழ்கின்றதாம். தயா ஜோதி வள்ளலின் பூரண அருள் அடையப் பெறும் வரை பிறப்பிறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். பூரண தயவு பெற்றுவிட்டாலோ அந்த நொடியிலே அருள் நியதி செய்வினையுடம்பு, அருட்ஜோதி சுத்த ஞான உருவாகி மன்னி விளங்கும்.