Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.426.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.

தயாநியதி

6

குறைவற்ற வின்பநிலை கூட்டவே நங்கோன்

முறைசெய்யுங் கண்டு முயல்.

426

குறள் விளக்கம்.

சிறிய இன்பத்தில் நாட்டம் வைத்து உழலாது, குறைவற்ற நிறை இன்பத்தை அடைய முயல்வது நம் கடமை. ஏனெனில் நம் பதி நமக்கு மேலான பேரின்பத்தை கூட்டி வைக்கவே தயாநியதி ஆட்சியே புரிந்து கொண்டுள்ளார். ஆன்ம இன்ப லாபமே நம் லட்சியமாகக் கொண்டு சுத்த தயா நெறியில் படர்வதற்கு உற்ற துணையால் விளங்குகின்றது இத்திருமுறை.