Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.424.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.

தயாநியதி

4

ஆணை வழிசென் றருளடையா வம்பாட்டால்

.கோணைவழி செல்லேல் குலைந்து.

424

குறள் விளக்கம்.

கடவுள், அக நின்று விதிக்கின்ற தயா நியதியாம் ஆணை வழி சென்று, அருளானந்த நிலையை அடைவதுவே அறிவுடைமை. இதுவே நல்ல ஒரு நேர் வழியாகும்.

இதனை விடுத்து தீங்கும் தொல்லையும், துன்பமும் நிறைந்த வளைந்து வளைந்து சுற்றிச் செல்லும் கோணை வழியில் சென்றால் திருவருளை எய்தற்கு முடியாது. அருளடையயது போனால் வாழ்வு வீணில் குலைந்து உயிரும் மெய்யும் உலைந்து பிரிந்து போகும்

.