Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.419.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.

வினையுடம்பு

9.

உழைப்பான் தயவா லுளநின் றுலகில்

.தழைப்பான் வினையைத் தகர்த்து.

419

குறள் விளக்கம்.

இவ்வுலகில் வினையுடம்பைத் தொலைத்து விட்டு (சுத்த வடிவில்) தழைப்பதற்கு, உள நின்று தயவால் உழைக்க வேண்டும். இதற்கும் முதலில் உள்ளத்திற் கலையாது ஒருமையோடு இருக்கவும் தயவால்தான் உழைக்க வேண்டும்.

ஆகவே, தயா விசாரத்தால் இடைவிடாது அகத்தே நின்று கொண்டு அங்கிருந்து சுத்த தயவுச் செயலோடு உலகில் வாழ்ந்து வந்தால், வினையுடம்பு விமல உருவாக மாறி விளங்கும்.