Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.417-

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.

வினையுடம்பு

7.

முயற்சி திருவினை மூட்டுந் தயவி

னுயர்ச்சி யொழிவி லுடம்பு.

417

குறள் விளக்கம்.

“மூட்டும்’ என்ற சொல் பொருத்தித் தரும் என்னும் பொருளோடு இருபுறமும் உற்று உணர்த்தும் சிங்க நோக்குடைய ஒன்றாம். யாதெனில், முயற்சியால் திருவினையும், தயா பெருக்கால் ஒழிவில்லாத உடம்பையும் சேர்த்து வைக்கும் என்பதே கருத்து.

தயா நன்முயற்சி ஆரம்பத்தில் திருவையும் ஈற்றில் ஒழிவில்லாத திரு (பொன்) உடம்பையும் கூட்டி வைப்பதாம்.