Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.410.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தோராம் அதிகாரம்

மனித சீவான்மா.

10

இம்மா னிடவுரு விங்கழியிற் பின்னாது

.வெந்நா ளுறலாமோ லிங்கு.

410.

குறள் விளக்கம்.

ஆன்மாவுக்கு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் இருக்கும் போதே பரமான்ம நிலையை அடைவதுதான் திருவருள் ஆணை. இதனை உணராது இப்பிறவி கழியுமாகில் அடுத்து எவ்வளவு காலம் ஆகுமோ ? இது போன்ற அருள் ஞானம் விளங்கும் பக்குவ மனித நிலை எய்துவதற்கு.

ஆகையால், மற்ற அற்ப லட்சியங்களையும், விருப்பு வெறுப்புக்களையும் விட்டுவிட்டு, சுத்த தயவு நெறியால் மனிதா சீவான்மா தெய்வ பரமான்மாவாம் கடவுள் மயமாவதற்கு நன் முயற்சி செய்தலே மனிதனின் கடமையாம்.