Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.389.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா

9
அருள்ஞான யோகம் அருங்கிரியை யோடு
பொருளைந்தும் ஆன்மாவின் பொற்பு.
389

குறள் விளக்கம்.
பொற்பு என்பது அழகு. இது புற அழகு மலரக் காரணமாய் உள்ள மன்னெழில் சக்தியாம். ஆன்மாவின் உட்பொருந்தியுள்ள தயவுப் பெருஞ் சக்தியே, அருட்சக்தி, ஞான சக்தி, யோக சக்தி, கிரியா சக்தி, பொருட் சக்தி என ஐந்து சக்தியாய் மலர்ந்து, பொங்கெழிலாகப் புறத்தே பொலிகின்ற்தாம்.ஆன்ம கன்ணால் இவ்வான்ம அருங்குண சக்தி வெளிப்பாட்டின் தோற்றமே உலகெலாம் நிறைந்து விளங்கக் காண்போம்.