Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.388.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா

8.
பாரறியா மாசக்தி பற்றிகவா சிற்றணுவில்
யாரறிவா ராங்கதுவா காது.
388.

குறள் விளக்கம்.
ஆன்ம சிற்றணுவில் பொருந்தி உள்ள பெரும் சக்தியை உலகம் அறிந்திருக்கவில்லை. அகம் பற்றி நிற்கும் அப்பெரும் சக்தியைப் புறத்திருந்து எவரும் கண்டு கொள்ள முடியாது.
திருவருள் ஒன்றினால்தான் அதுவாகி (தயவாலும், ஒருமையாலும் அகத்தே இரண்ட நின்று) அக அனுபவத்தால் அச்சக்தி மயமாய்த் திகழலாம் என்பது சுத்த சன்மார்க்கம் கண்ட முடிவு.
பற்றிசுவா = (உட்பொருந்திய நிலையினின்று) கடந்து வெளியேறாத.