Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.376.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.

.6
சுத்ததயா சன்மார்க்கம் சூழவே யாவருமிங்(கு)
இத்தயவு கொள்வீ ரினி.
376

குறள் விளக்கம்.
இதுவரை வந்த பல்வேறு மார்க்கங்களால் உலகில் பெருநலம் தோன்றத்க் கூடாது போயிற்று. அவற்றால் அதைத் தோற்றுவிக்கவும் முடியாது.
ஒன்றான தயாபெருஞ்சோதி பதியிடமிருந்து விரிகின்ற சுத்த தயா மார்க்கம் ஒன்றிலாலே பெரு நலம் பெற்று வாழலாகும். ஆதலின், யாராக இருந்தாலும், உள்ளத்தில் இருந்து இச்சுத்த தயை வளர்க்கப் பழகுதல் வேண்டும். புறநிலை வாழ்க்கை முறை பற்றி பேதம் கற்பித்தல் கூடாது.