Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.316

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

6.
மாசுறு வெங்கரணம் மக்களை மாக்களாய்
316.
நாசமுறச் செய்யும் நலிந்து.

குறள் விளக்கம்.
அன்பும் அறிவும் நிறைந்த தூயமனம் ஒன்றினால்தான் மனிதன் மனிதனாக விளங்குவான். அஃதில்லாத மாசு உடைய தீய மனம் படைத்த மனிதன், மனிதனாகக் கூறப்பட்டன். விலங்கினத்தோடு ஒப்பிடப்படுவான்.
மும்மல மாசு, கரணத்தை வெம்மையுறச் செய்து மனிதனைப் பாழ்படுத்துவது. சுத்த தயவோ கரணத்தைத் தண்மையுறச் செய்து மனிதனை வாழ்விப்பதாம்.