தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பதாம் அதிகாரம்.
மனோன்மணி.
| 7. | மணியொளிர் சோதி மனத்தகத் தாக்கி
பணிகொள வோர்மையுறப் பற்று. |
297. |
குறள் விளக்கம்.
மனத்திலே எப்பொழுதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும்படி தயாமணியை அகத்திலே இருத்திக் கொண்டு, புறத்திலே உலகியற் பணிகளைச் செய்துவரல் வேண்டும்.
தயா ஓர்மை உண்டானால்தான், சூழ் உலகெல்லாம் நம் முன் தாழ்ந்தேவல் புரியும். நாமும் தடையிலாது பணிந்து அன்பு செய்யலாம்.
Write a comment