Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.226.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.

6.
அணுவகம் ஆய்ந்தும் அருளியலை யங்கு
நுணுகியறிந் தாரோ நுவல்.
226

குறள் விளக்கம்
கண்ணால் காணற்கரிய மிகச்சிறிய அணுவைக் கருவிகளாற் கண்டும், அதனைப் பகுத்து உள்ளியலை ஒருவாறு கண்டும், அது கொல்ண்டு பல அருஞ்செயல்கள் புரிந்தும் பெருமித வாழ்வில் மயங்கியுள்ள மாந்தர், அவ்வணுச் சக்திக்கும், அகண்டாண்ட சக்திக்கும் ஆதாரம் ஆகிய கடவுள் அருள் என்னும் பெருஞ்சக்தியை அறியாதிருக்கின்றார்கள்.
அந்த அருள் இயல் உண்மையை நன்கு ஆய்ந்து அறிந்து கொள்ளாததினால் அவர்களுடைய பெருமித வாழ்வெல்லாம் வெறுமையாகிப் போகின்றதாம்.