தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தோராம் அத்தியாயம்.
மருட்கை
|
3.
|
புலமயக்கும் வாழ்க்கை புனிதமல பொய்யே
வலமழிக்கும் மாயா வழு.
|
203.
|
குறள் விளக்கம்.
பொய்யான, பரிசுத்தமில்லாத இந்திரிய சுகத்தைக் கொடுத்து உள மயங்கச் செய்யும் புற நெறி வாழ்வு நல்லதல்ல, அது நமது மெய் ஆற்றலை, அருள் அனுபவத்தைக் கெடுக்கும் பெருங்குற்றமுடையதாம்.
மாயா = என்பது பொய்மயமானது அல்லது அழியாதது.
அதாவது, புலனறிவை மயக்கி அவாவைப் பெருக்குகின்ற இந்த வழு, உடல் நீங்கினும் நீங்காது பல பிறவிகளிலும் தொடர்வதால் அழியாமை உடையதாய்க் கூறப்படுகின்றது.
மருட்கைதான் புலனறிவை மயக்குகின்ற மாயாத வழுவாகக் கூறப்படுகின்றதாம்.
Write a comment