இன்று இவரைப் பற்றி … … … சாது சிவராமன், திருக்கண்டீஸ்வரம்.
|
1.
|
பெயர்
|
சாது சிவராமன்.
|
|
2.
|
வயது
|
58
|
|
3.
|
பணி
|
கிளை அஞ்சலக அதிகாரி (மத்திய அரசு)
|
|
4.
|
பணிபுரியும் இடம்
|
திருக்கண்டீஸ்வரம், நெல்லிக்குப்பம் அருகில்.
|
|
5.
|
தகப்பனார் பெயர்
|
மு. பாண்டுரெங்கம்
|
|
6.
|
தாயார் பெயர்
|
எம். ஜெயலெட்சுமி
|
|
7.
|
யோகப் பயிற்சி
|
15வது வயதில் துவங்கியது
|
|
8.
|
யோகசாலை பொது உபயோகத்துக்கு அமைத்த விபரம்
|
1988 ஆம் ஆண்டில் (அன்றைய மதிப்பீடு ரூ.8 லட்சம்) இடம் வாங்கி, தியான மண்டபம் கட்டப்பட்டது. அரிய வகை மூலிகைகள் பயிரிடப்பட்டன. 20 வகையான உணவு மருந்துகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
|
|
9.
|
வைத்தியம் கற்றது
|
திரு கோதண்டராம சர்மா அவர்களிடமிருந்து.
|
|
10.
|
உடன் பிறந்தோர்
|
6 ஆண்கள், 3 பெண்கள்.
|
|
11.
|
மனைவி பெயர்
|
திலகவதி அம்மையார் (வீட்டுக் குடித்தனம்) (12.2.1978ல் திருமணம்)
|
|
12.
|
உத்யோகம்
|
தர்மச்சாலை நிர்வாகப் பொறுப்பு
|
|
13.
|
குழந்தைகள்
|
2
(1) பையன் திரு ஞானப்பிரகாசம் (B.E. Automobile Engineer, Software Engineer – working in Bombay)
(2) காயத்ரி பாலா (கணவர்-முருகேசன் கொடைக்கானல்-பேரன் சிபிச் சக்ரவர்த்தி)
|
|
14.
|
வீட்டின் பெயர்
|
ஞான பவனம் (1993ல் கட்டப்பட்டது)
|
|
15.
|
பயிற்சிகள் கொடுப்பது
|
இலவச யோகப்பயிற்சி- பிரதி ஞாயிறு 7.30 காலை முதல் 9.00 வரை
உணவே மருந்து வகுப்பு – காலை 10 மணி முதல் 3 மணி வரை.
|
|
16.
|
மருத்துவம் கற்றது
|
பிரமஸ்தி. திரு சிவானந்த பரமஹம்சர், வடகரை, ஜீவகரை, கேரளா மாநிலம்.-சித்த வேதம், மூச்சுப்பயிற்சி.
|
|
17.
|
சுத்த சன்மார்க்க வழியில் நிற்பது
|
1974 முதல்
|
|
18.
|
ஆசான்
|
திரு அகண்டானந்த சுவாமிகள், திருக்கோவிலூர்
|
|
19
|
திருவருட்பா குறித்த சுத்த சன்மார்க்க சொற்பொழிவு, அன்பர்களின் சந்தேக நிவர்த்தி, தியானம்
|
பிரதி வாரம் மாலை 6.00 மணி
|
|
20.
|
அன்னதானம்
|
வாரந்தோறும்.
|
|
21.
|
அறக்கட்டளையின் பெயர்
|
சமரச சுத்த சன்மார்க்க சத்திய அறக்கட்டளை, திருவடுகூர் @ திருக்கண்டீஸ்வரம்.
|
|
22.
|
துவங்கிய வருடம்
|
2006ல்.
|
|
23.
|
யோகசாலை விலாசம்
|
சமரச சுத்த சன்மார்க்க சத்திய அறக்கட்டளை, யோகசாலை, திருவடுகூர் @ திருக்கண்டீஸ்வரம், நெல்லிக் குப்பம், கடலூர் மாவட்டம், பின் கோடு எண். 607 105.
|
|
24.
|
யோகா பயிற்சி அளிக்கும் மாஸ்டர் பெயர்
|
திரு குண சேகரன். அஹ்மதாபாத்.
|
|
25.
|
யோகா பயிற்சி அளிக்கும் மாஸ்டர் சேர்ந்த விதம்
|
வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு சாது அவர்களிடம் வந்து, யோகப் பயிற்சி மூலம் வியாதி நீங்கப்பெற்றார். சாது அவர்களிடம் யோகக் கலையினைப் பயின்றார். பல இடங்களிலும் அவர் சென்று யோகப் பயிற்சியினை பொது மக்கள் அறியும் வண்ணம் செய்து காட்டி வருகிறார். இவரது மகள் செல்வி கல்பனா உலக அளவிலே நடைபெற்ற யோகக்கலை குறித்த போட்டியில் 2வது அளவில் தேர்ச்சி பெற்று பரிசு பெற்றவர்
|
2 Comments
திருக்கண்டீஸ்வரம் அய்யா அவர்கள் வழக்கமாக, வடலூரில் பிரதி மாதமும் பூச நாளில், மாலை சுமார் 5.30 மணியளவில்ல்,
கல்பட்டு ஐயாவின் ஆலயத்திற்கு கிழக்கே உள்ள பன்ருட்டியைச் சேர்ந்த லக்ஷ்மி சந்திரன் அறக்கட்டளைக் கட்டிடத்தில் திரு
அருட்பா பாடல்களுக்கு எளிமையான முறையில் அங்கு கூடும் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்களுக்கு விளக்கம்
தருவதை, வழக்கமான ஒரு பணியாகக் கொண்டுள்ளார்கள்.
உண்மையில் இவர்களால் - (1) ஒரு வகையில் இலவசமாக தம்மிடம் வரும் அன்பர்களுக்கு யோகப் பயிற்சி செய்யக்
கற்றுக் கொடுத்து, வள்ளற் பெருமான் சொல்லிய வண்ணம், உடம்பினை நல்ல முறையில் பராமரிப்பதற்குத் தெரிந்து
கொண்டுள்ளது.
(2) அடுத்ததாக, திரு அருட்பா பாடல்களுக்கு விளக்கம் சொல்வதன் மூலம், சன்மார்க்க அன்பர்கள், அறிவு விளக்கம்
பெற்று, அனைவரும் பயன் பெற்று வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை..
சாது அய்யாவின் எளிமைத் தோற்றம், அனைவருடனும் சகஜமாகப் பழகும் விதம், பலரை, வெகு எளிதாக, பெருமான்
காட்டிய சன்மார்க்கப் பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது என்றால் அது மிகையாது.
இவர்களிடம், மாநில அளவில் மிக உயர்ந்த பதவியில் உள்ள உயர் அதிகாரிகள் வந்து, தமக்கு உள்ள உடல் மற்றும் மன
அளவில் உள்ள குறைபாடுகளைத் தெரிவித்து சரியான யோகப் பயிற்சியினைத் தெரிந்து, கொண்டு நலம் பெற்றுச்
செல்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் சாது அய்யா அவர்கள் நடத்தும் யோக சாலைக்கு வந்து, அங்கு நடைபெறும் பணிகளை பார்த்துச்
சென்றுள்ளார்.