13.8.2011 சனிக்கிழமை திண்டுக்கல் நாகல்நகர் அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளை-4வது ஆண்டு விழா திரு S.S.கிருஷ்ணமூர்த்தி-விஜயலக்ஷ்மி மஹாலில் நடைபெற்றது.
=0=0=0=0=
திண்டுக்கல் நாகல் நகரில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளை, தனது 4வது ஆண்டுவிழாவினை. 13.8.2011 சனிக்கிழமை அன்று, மிகச் சிறப்பான முறையில் அருட்பெருஞ்ஜோதி S.S.கிருஷ்ணமூர்த்தி விஜயலக்ஷ்மி மஹாலில் கொண்டாடியது.
காலை 10.30 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சிகள், மதியம் மற்றும் மாலை தொடர்ந்து, இரவு வரை நடைபெற்றன.
மாலை சுமார் 5.30 மணி அளவில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் ப்ளெக்ஸ் பேனரை ஒரு ட்ராக்டர் வண்டியில்
கட்டி, திண்டுக்கல் நகரின் முக்கியமான பகுதிகளில் வீதி உலா வரச் செய்தனர்.
மூத்த சன்மார்க்க அன்பர்கள், தாய்மார்கள். பள்ளிக் குழந்தைகள் ஆகியோர் சகிதம் அந்த வீதி உலாவில் அருட்பெருஞ்ஜோதி
மகாமந்திரம் ஒலிக்கச் செய்து திண்டுக்கல் மாநகரில், ஒரு விழிப்புணர்வினை, சன்மார்க்க அன்பர்கள் ஏற்படுத்தினர். இரவினில்
சன்மார்க்க சான்றோர்பெருமக்கள் சொற்பொழிவு, குழந்தைகளின் நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் மிகச் சிறப்புடன் நடந்தன. அந்
நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்பித்த குழந்தைச் செல்வங்களுக்கு, அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளையின் தலைவரும்
திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவருமான திரு S.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி
கெளரவித்தார். திரளான மக்கள் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
இரவு 9.00 மணி அளவில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்றன.
005
017
042.JPG
013.JPG
025
044.JPG
089
099.JPG
090
050.JPG
092
094
095
097
124
063.JPG
007.JPG
127
133
054.JPG
134
139
235
208
209
211
162.JPG
213
198
026.JPG
216
238
251
244
261
248
265
270
080.JPG
284
239
240