11.7.2010 சிவகங்கை மாவட்டம்-திருப்பாச்சேத்தி கிராமம்-சத்திய தருமச்சாலை துவக்க விழா நிகழ்ச்சி.
=0=0=0=0=
கடந்த 11.7.2010 (ஞாயிறு) அன்று, காலை 5.30 மணி அளவில், திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலுடன்,
மானாமதுரை வட்டம், திருப்பாச்சேத்தி கிராமத்தில் இயங்கி வரும் சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தின்
சத்திய தருமச்சாலை துவக்க விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்புடன் நடைபெற்றன.
அன்பர் ஒருவர் திரு காமாட்சி ஐயாவின் (நடுவில் உள்ளவர்-வயது 85) அயராத பல ஆண்டு சன்மார்க்கப்
பணிகளைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். வலது புறம் சிவரக்கோட்டை
சன்மார்க்க சங்க நிர்வாகி திரு கதிரேசன் உள்ளார்.
தருமச்சாலையின் பொறுப்பினைக் கவனித்துக் கொள்வதற்கு நியமிக்கப்பட்டவருக்கு திரு.காமாட்சி ஐயா
பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.