இன்று இவரைப் பற்றி … திரு சாய் குமாரின் இசை அமைப்பில்
செல்வி ஷ்ராவ்யா .. .. ..
http://www.vallalarfiles.com/image/qbT7NNWRMfIqFuLaV3,$,2flKA,$,3d,$,3d/sz-tn650/091120081324040000.jpg
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு - திரைப்பட இயக்குனர் திரு கோதண்டராமையா, திரு சுப்புராமன் ஆகியோர் 8 திரு அருட்பா
பாடல்களுடன் வடலூர் மேட்டுக் குப்பம் மருதூர் முதலான இடங்களுடன் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி தரிசனத்துடன்
கூடிய ஒரு V.C.D தயாரித்து வெளியிட்டனர்.
மனத்தைக் கொள்ளை கொள்ளும் இசையுடன் திரு அருட்பா பாடல்கள் வெளியாயின.
அந்த இசைப் பேழையில், திரு S.P. பாலசுப்ரமணியன், ஷ்ராவ்யா, மற்றும் ஒருவர் திரு அருட்பா பாடினர்.
குமாரி ஷ்ராவ்யா, வள்ளல் பெருமான் பிறந்த நாளான அக்டோபர் 5ந் தேதியில் பிறந்தவர் என அவர் சமீபத்தில் திரு அருட்பா
இசை அமைப்பில் பாடுவதற்காக அவரது தாத்தாவுடன் வந்திருந்தபோது அவரது தாத்தா தெரிவித்தார். தற்போது செல்வி ஷ்ராவ்யா பி.இ.
முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவரது குரல் வளத்தைக் கண்ட திரைப்பட இசை அமைப்பாளர்கள் சிலரது இசை அமைப்பிலும்
திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார்.
பெருமானின் அருட் கடாட்சத்துடன் குழந்தை பாட வந்துள்ளாள் என அவர் தெரிவித்தார்.
இந்த முறையும் இசை அமைப்பாளர் திரு சாய்குமார் அவரது இசை அமைப்பில் சுமார் 10 திரு அருட்பா பாடல்களை செல்வி ஷ்ராவ்யா
பாடியுள்ளார்.
சென்னையில் ரிக்கார்டிங் தியேட்டரில் இசை அமைப்பாளர் திரு சாய் குமார், செல்வி ஷ்ராவ்யா, அவரது தாத்தா ஆகியோரது போட்டோ
http://www.vallalarfiles.com/image/3Fa4M5T,$,2bWTqla,$,2fxn8fwZnw,$,3d,$,3d/sz-tn650/081120081323960000.jpg
http://www.vallalarfiles.com/image/BosfzsSQo3AbxR2A,$,2fw2mOw,$,3d,$,3d/sz-tn650/091120081323980000.jpg
http://www.vallalarfiles.com/image/m5ZWIGiSjqy1C1tMfB1l0A,$,3d,$,3d/sz-tn650/091120081324000000.jpg
http://www.vallalarfiles.com/image/iQgA4IwfYzh1Wx2HOum37Q,$,3d,$,3d/sz-tn650/091120081324020000.jpg
http://www.vallalarfiles.com/image/qbT7NNWRMfIqFuLaV3,$,2flKA,$,3d,$,3d/sz-tn650/091120081324040000.jpg
http://www.vallalarfiles.com/image/F5ppdXXqzVCAK3E2tC1sJA,$,3d,$,3d/sz-tn650/091120081324060000.jpg
2 Comments
A. Sahasranamam,
Chennai.
மூலம் பாடிய "வான் கலந்த மாணிக்க வாசக .. நின் வாசகத்தை .. நான் கலந்து
பாடுங்கால் .. நற்கருப்பஞ் சாற்றினிலே ..
என்ற பாடல், திரு அருட்பா தெரிந்த நெஞ்சங்கள் அனைத்திலும் புகுந்து .. அந்த
திரு அருட்பாவினை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆவலைத்
தூண்டியது.
திரு சாய் குமார் அவர்கள், சிங்கப்பூரில் உள்ள சன்மார்க்க அன்பர் திரு சிவகுமார்
அவர் வேண்டுதலின் பேரில், Thiru Arutpa Deiva Isai Amutham Project-க்காக, தற்போது
மீண்டும் திரு அருட்பா பாடல்களை இசை அமைத்து வருகின்றார்கள். அதிலும்
செல்வி ஷ்ராவ்யா பாடியுள்ளார். ஓரிரு மாதங்களில் அந்த ஆடியோ சி.டி.
வெளியிடுவதற்கான முயற்சியில் திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட்
நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதில் கண்ட காட்சிகள் தான் மேலே உள்ளவை.