Vallalar Universal Mission Trust   ramnad......
சத்தமில்லாமல் ஒரு அன்னதானம் மதுரையிலே
சத்தமில்லாமல் ஒரு அன்னதானம் மதுரையிலே
thinaththanthi papper news madurai 2013.jpg

thinaththanthi papper news madurai 2013.jpg

thinaththanthi papper news madurai 2013.jpg

thinaththanthi papper news madurai 2013.jpg

Daeiou  Daeiou.
சன்மார்க்க சீலர் திரு அன்பானந்தம் அவர்களால் துவக்கப்பட்ட இந்த தருமச்சாலை, அருகிலே உள்ள அஞ்சலகத்திற்கு எதிரில் அமைந்த ஒரு மாடியில் உள்ளது. மதியம் உணவு தயாரித்து வந்து, தொலைபேசி எக்ஸ்சேஞ் அருகில் மதிய உணவு, ஏழை எளியோருக்கு அளிக்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த தெரு, கடைகள் நிறைந்த ஒரு தெரு. எனவே, அங்கு, சரக்கு இறக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகள், தினந்தோறும், மதியம் வருகை தந்து, வயிராற உண்டு செல்கின்றனர். அவர் காலத்திற்குப் பின், அங்கேயே பணி புரிந்த ஒரு அம்மையாரின் தலைமையின் கீழ், இப்பணி, அன்பர்களின் பேராதரவினால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த இடம், டெலிபோன் துறைக்குச் சொந்தமானது. எனவே காலி செய்ய வேண்டும் என்று திரு அன்பானந்தம் அவர்கள் காலத்தில், டெலிபோன் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒரு நாள் வருகை புரிந்தனர். அவர்கள் வந்த நேரம், மதிய உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த நேரம்.

வந்து பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். ஆகா...என்ன உன்னதமான பணியினை மேற்கொள்வதற்கு..இந்த இடத்தை..திரு அன்பானந்தம் அவர்கள் பயன்படுத்துகின்றார்கள். எனவே, இதனை நாம் தடுக்க வேண்டாம் என. வந்திருந்த தொலைத் தொடர்புத் துறை அலுவலர், தம் பங்கிற்கு,..ஒரு தொகையினைக் கொடுத்து...ஜீவகாருண்யம் தழைக்க...உதவி புரிந்தாராம். இதனை திரு அன்பானந்தம் அவர்களே...தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்த இடம், மதிய அன்னம் அளிக்கும் பணிக்குப் பயன்படுகின்றது.

கடந்த 9.6.2013 அன்று, திரு அன்பானந்தத்தின் ஓராண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. திரு அருட்பா பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது.
Tuesday, June 18, 2013 at 07:39 am by Daeiou Daeiou.