Vallalar Universal Mission Trust   ramnad......
மூவகைச்சித்து

மூவகைச்சித்து

வள்ளல் இராமலிங்க அடிகள் ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழுகோடியும் விளக்கும் அருட்பெரும் பொருளே” என்ற அருட்பா வரிகளில் , சித்துக்கள் அறுபத்து நான்கெழுகோடி” என்கின்றார்.

பொதுவாகச் சித்திகளை , (1) கருமசித்தி (2) யோக சித்தி ,(3) ஞான சித்தி என மூன்று வகையாகத் தொகுக்கின்றார், வள்ளல் இராமலிங்க அடிகளார், இதனை

மூவகைச்சித்தியின் முடிபுகள் முழுவதும்

ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

கருமசித்திகளின் கலைபல கோடியும்

அரசுற எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

யோகசித் திகள்வகை உறுபல கோடியும்

ஆக என்றெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

ஞானசித்தி யின் வகை நல்விரி வனைத்தும்

ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி”

என்ற அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் அறிகின்றோம்.

பொதுவாக அட்டமா சித்தி” என்பதே வழக்கு இதனை அட்டமா சித்திகளும் நினது ஏவல் செய்யும் என்ற அருட்பா வரியில் அடிகளும் ஒப்புக்கொள்கின்றார்.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

.பொ.சிவஞானம்

vallalarspace.com/vumt

hariharan_82
No one is trying to get what Vallalar Swamigal told...
Is there anybody...after .. Vallalar Swamigal..attained deathlessness...
This is what all are questioning..when opened about the preaching of Vallalar Swamigal.
Monday, December 7, 2009 at 23:23 pm by hariharan_82